சென்னையில் இன்று (மே 16) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ₹120 குறைந்து, ₹1,18,000-க்கு விற்பனையாகிறது. இது நகை வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
சர்வதேச பொருளாதாரம், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு, உலக பங்குச் சந்தை நிலவரங்கள் போன்ற பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன. இந்தியா தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.
முன்னதாக, கடந்த மே 13 அன்று, மத்திய அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இதனால் அன்று தங்கம் விலை கிராமுக்கு ₹670 அதிகரித்தது. அதைத் தொடர்ந்து மே 14 அன்று கிராமுக்கு ₹50 உயர்ந்தது. ஆனால், மே 15 அன்று தங்கம் விலை கிராமுக்கு ₹285 குறைந்தது. இந்த வீழ்ச்சி இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் நீடித்துள்ளது.
இன்று, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹15 குறைந்து ₹14,750-க்கு விற்பனையாகிறது. 24 காரட் தங்கத்தின் விலையும் பவுனுக்கு ₹136 குறைந்து ₹1,28,728-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ₹15 குறைந்து ₹290-க்கும், கிலோவுக்கு ₹15,000 குறைந்து ₹2,90,000-க்கும் விற்பனையாகிறது.