செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 21 மாணவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உடனடியாக பள்ளி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் அறியையில், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இன்று பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவின்போது, ஒரு மாணவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு சக மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கியுள்ளார். இந்த சாக்லேட்டை சுமார் 21 மாணவர்கள் விரும்பி சாப்பிட்டுள்ளனர்.
சாக்லேட் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, மாணவர்கள் சிலருக்கு அடுத்தடுத்து வாந்தி ஏற்படத் தொடங்கியுள்ளது. வாந்தி எடுத்த மாணவர்களில் சிலருக்கு திடீரென மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு பள்ளி நிர்வாகம் முதலுதவி அளித்தது.
மேலும், இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க, பள்ளி நிர்வாகம் உடனடியாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுகாதாரத் துறையினர், பாதிக்கப்பட்ட மாணவர்களை பரிசோதித்து, அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்தனர். மேலும், சாக்லேட் வழங்கிய மாணவரிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், சாக்லேட்டில் ஏதேனும் கலப்படம் இருந்ததா அல்லது காலாவதியான சாக்லேட்டா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட முதலுதவிக்குப் பிறகு, அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சுகாதாரத் துறையினர் தொடர்ந்து மாணவர்களின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் தரப்பிலும், பெற்றோர்கள் தரப்பிலும் மிகுந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி, சாக்லேட் வழங்கப்பட்ட மாணவர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.