நாட்டின் முன்னணி மனிதவள மற்றும் பணியாளர் தீர்வுகளை வழங்கி வரும் சிஐஐஎல் ஹெச்ஆர் நிறுவனம், 2026 ஆம் நிதியாண்டில் மொத்த வருவாயாக ரூ.1,984.6 கோடியை ஈட்டியுள்ளது. இதன் மூலம், அந்நிறுவனம் 32 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் க. பாண்டியராஜன் கூறியதாவது: 'பத்தாண்டுக் குள் ரூ. 1,000 கோடி மதிப்பிலான மனிதவள நிறுவனமாக உயர வேண்டும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட சிஐஐஎல், தற்போது தொழில்நுட்பம், ஏஐ உதவியுடன் அந்த மைல்கல்லை 9 ஆண்டுகளிலேயே எட்டிப் பிடித்துள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2030-ம் ஆண்டுக் கான தொலைநோக்குத் திட்டத்தின் மூலம், வரும் 2030-ம் ஆண்டுக்குள் ரூ. 6,000 கோடி வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.'
தற்போதைய தொழில் சூழலில், நிறுவனங்கள் ஒருங்கிணைந்த பணியாளர் மேலாண்மை முறையை நாடுகின்றன. மாறிவரும் தொழில் சூழலுக்கு ஏற்ப நிறுவனங்களுக்குத் தேவையான திறன் மற்றும் தொழில் நுட்பத் தீர்வுகளை வழங்கும் முதன்மைப் பங்காளியாக சிஐஐஎல் உருவெடுத்துள்ளது.
இந்த வளர்ச்சி, சிஐஐஎல் நிறுவனத்தின் தொலைநோக்கு திட்டமிடல் மற்றும் வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதன் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. எதிர்காலத்திலும் இதேபோன்ற சிறப்பான வளர்ச்சியை இந்நிறுவனம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.