தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், அடுத்த ஷாக் அளிக்கும் விதமாக இன்று 2வது நாளாக விலை உயர்ந்துள்ளது. அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், தங்கம் விலை சரிவை நோக்கி சென்றது. கடந்த 8 நாட்களில் மட்டும் தங்கம் விலை சுமார் ரூ. 8 ஆயிரம் குறைந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இந்த விலையேற்றம் நிரந்தரமில்லை என நிபுணர்கள் மற்றும் நகை வியாபாரிகள் கணித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
நேற்று (ஜூன் 12) ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 13,800 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 2,400 அதிகரித்து ரூ. 1,10,400 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இன்று சவரனுக்கு மேலும் ரூ.480 உயர்ந்து ரூ.110,880 ஆகவும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.13,860 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மட்டுமல்லாது, வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.270-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,70,000-க்கு விற்பனையாகிறது.
தொடர்ந்து விலை உயர்ந்து வருவது நகை வாங்க நினைக்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தங்கத்தின் விலை உயர்வு பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.