MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆவடியில் மூதாட்டி கொலை: நகை, பணத்துக்காக நடந்த கொடூரம் – இருவர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆவடியில் மூதாட்டி கொலை: நகை, பணத்துக்காக நடந்த கொடூரம் – இருவர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - ஆவடியில் மூதாட்டி கொலை: நகை, பணத்துக்காக நடந்த கொடூரம் – இருவர் கைது

க்ரைம்

ஆவடியில் மூதாட்டி கொலை: நகை, பணத்துக்காக நடந்த கொடூரம் – இருவர் கைது

Admin
Last updated: மே 16, 2026 9:29 காலை
Admin
Share
SHARE

சென்னையை அடுத்த சூரப்பட்டு பகுதியில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டி பொன்னம்மாள், நகை மற்றும் பணத்துக்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நிலத்தரகர் பழனி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் துளசிதாஸ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூரப்பட்டு, துளுக்கானத்தம்மன் கோயில் 7-வது தெருவைச் சேர்ந்த பொன்னம்மாள், தனது கணவர் 2006-ல் இறந்த பிறகு தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 6 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 7.45 மணியளவில் ஆட்டோவில் வந்த இருவர், இரவு 8.45 மணியளவில் திரும்பிச் சென்றுள்ளனர். இதை சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், பொன்னம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்களுடனும் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொன்னம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பொன்னம்மாளின் 5-வது மகள் கெஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பொன்னம்மாள் தனது குடும்பத்திற்கு சொந்தமான சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்து, அதில் 31 லட்சம் ரூபாயை முன்பணமாக பெற்றுள்ளார். இந்த பணத்தை தனது 6 மகள்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் என பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதி தொகையை வங்கிக் கணக்கில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

நிலத்தை விற்பனை செய்வதில் இடைத்தரகராக செயல்பட்ட பழனி, இந்த முன்பணத் தொகை வீட்டில் இருப்பதாக நினைத்து, அதை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். நிலத்தை வாங்கியவரிடம் இருந்து பெற்ற பணத்தை, மகள்களின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தியதை அறியாத பழனி, தனது நண்பரான ஆட்டோ ஓட்டுநர் துளசிதாஸுடன் சேர்ந்து பொன்னம்மாள் வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பீரோவில் பணம் இல்லாததால், பீரோவில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும், பொன்னம்மாள் அணிந்திருந்த 4 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து 1.27 லட்சம் ரூபாய் ரொக்கமும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Avadi murderChennai PoliceTamil Nadu Crimeஆவடிநகை கொள்ளைமூதாட்டி கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சீனாவில் 6 ‘சூப்பர் ஆடுகள்’ குளோனிங்: பால் உற்பத்தியில் புரட்சி!
Next Article ஐக்கிய அரபு அமீரகம் சென்றார் மோடி: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

க்ரைம்

பணம் கேட்டு தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்த பேரன்!

போதைக்கு அடிமையான பேரன், பணம் கேட்டு தகராறு செய்ததில் தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
க்ரைம்

தூத்துக்குடி போக்சோ வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள் விரைவில்…

1 Min Read
க்ரைம்

கபடி பயிற்சியாளர் மீது பாலியல் புகார்: அதிர்ச்சியில் கண்ணகி நகர்

சென்னையின் கண்ணகி நகரில், கபடி பயிற்சியாளர் ராஜு மீது 17 வயது வீராங்கனை பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். 'அட்ஜெஸ்ட்மென்ட்' செய்தால் மட்டுமே விளையாட அனுமதிப்பதாக மிரட்டியதாக…

1 Min Read
க்ரைம்

தூத்துக்குடி பள்ளி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில், தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர் ஏற்கனவே…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?