தமிழக முதல்வர் விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை இன்று சந்திக்கவிருந்ததாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. விஜயை வரவேற்கும் விதமாக பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.
காலை 10 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நேற்று இரவே சந்திப்பு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், விஜய் அடுத்த வாரம் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்களை மேற்கோள் காட்டி ஒரு பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைத்து ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் விஜய் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவிருந்த தகவல் முக்கியத்துவம் பெற்றிருந்தது. தற்போது சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.