திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக முதல்-அமைச்சர் விஜய், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக விரைவில் திருச்சிக்கு வர உள்ளார். இது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்-அமைச்சர் விஜய் விரைவில் திருச்சிக்கு வருகை தந்து மக்களை சந்திப்பார். மேகதாது அணைகட்டுவது தொடர்பாக தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தொண்டர்களால் தேர்வு செய்யப்படுபவரே இருக்க முடியும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் இல்லை.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது என்பது தனிப்பட்ட விருப்பம். அரசியலில் எதுவும் சாத்தியம். தற்போது கட்சியில் சேர்ந்தவர்களுக்கு மீண்டும் எம்.எல்.ஏ. சீட் வழங்கப்படுமா என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.