MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக அன்பு நியமனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக அன்பு நியமனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக அன்பு நியமனம்

அரசியல்

தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக அன்பு நியமனம்

Admin
Last updated: மே 26, 2026 7:39 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, நிர்வாக சீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக முக்கிய அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக டி.எஸ்.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை முன்னாள் காவல் ஆணையராக இருந்த அருண், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில், நடிகர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்ததை அடுத்து, நிர்வாக வசதிக்காகவும், செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு முன்னர், உளவுத் துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார். சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டார். அங்கு பணியிலிருந்த அபின் தினேஷ் மோடக்குக்கு சிபிசிஐடி பிரிவு கூடுதல் டிஜிபி பணி வழங்கப்பட்டது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளுக்கும் அடுத்தடுத்து பணியிடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அன்பு ஆகியோர் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக உள்துறை செயலர் மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக இருந்த மகேஷ்வர் தயாள் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி-யாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் டிஜிபி அருண் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.எஸ்.அன்பு மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி இடமாற்றங்கள் காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IPS நியமனம்Tamil Nadu Policeஅரசு நிர்வாகம்சட்டம் ஒழுங்குதமிழக காவல்துறைலஞ்ச ஒழிப்புத்துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பயிர்க்கடன் தள்ளுபடி: விவசாய சங்கங்கள் எதிர்ப்பு, பாமக வரவேற்பு
Next Article என்ஜினீயரிங் படிப்பு: ஆன்லைன் பதிவு 2.5 லட்சத்தை தாண்டியது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள் அகற்றப்படும் காட்சி

டெல்லி பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள் நேற்று ஜேசிபி இயந்திரம் மூலம்…

ஆகஸ்ட் 21, 2026

கருத்து வேறுபாடுகள் சித்ரவதை ஆகாது: விவாகரத்து மனு தள்ளுபடி

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மனரீதியான…

ஆகஸ்ட் 21, 2026

காஷ்மீர் செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்தில் மணிக்கு 100…

ஆகஸ்ட் 21, 2026

வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை…

ஆகஸ்ட் 21, 2026

மத்திய அமைச்சரவை மாற்றம்: பெண்களுக்கு முக்கியத்துவம், பிரதானுக்கு புதிய துறை?

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

அரசியல்

விஜய் ஆட்சி மக்களுக்கு நன்மை செய்தால் மார்க்சிஸ்ட் ஆதரவு – பெ.சண்முகம்

தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய் நல்லாட்சியை வழங்கினால் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தொடரும். இல்லையென்றால், எங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என மாநில செயலாளர்…

1 Min Read
அரசியல்

அதிமுக உட்கட்சி பூசல்: நீக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியில் தொடர்வார்கள் – வேலுமணி, நத்தம் திடீர் அறிக்கை!

அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை மீறி, நீக்கப்பட்ட நிர்வாகிகள் தங்கள் பதவிகளில் தொடர்வார்கள் என்று எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன்…

2 Min Read
அரசியல்

தமிழகத்தில் முதலீடுகள்: முதல்வர் அழைப்பு! புதிய வாய்ப்புகள்?

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கவும், புதிய திட்டங்களை விரிவுபடுத்தவும் முதல்வர் ஸ்டாலின் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். BMW, Yamaha போன்ற நிறுவனங்களுடன் ஆலோசனை.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: ரூ.37 லட்சம் பறிமுதல்

தமிழகம் முழுவதும் 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.31.85 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.5.95 லட்சம் ஜிபே பரிவர்த்தனைகள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?