MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விஜய் ஆட்சி மக்களுக்கு நன்மை செய்தால் மார்க்சிஸ்ட் ஆதரவு – பெ.சண்முகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > விஜய் ஆட்சி மக்களுக்கு நன்மை செய்தால் மார்க்சிஸ்ட் ஆதரவு – பெ.சண்முகம்
அரசியல்

விஜய் ஆட்சி மக்களுக்கு நன்மை செய்தால் மார்க்சிஸ்ட் ஆதரவு – பெ.சண்முகம்

Admin
Last updated: May 16, 2026 8:59 pm
Admin
Share
SHARE

மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய் நல்லாட்சியை வழங்கினால் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தொடரும். இல்லையென்றால், எங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்' எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 'கடந்த 10 நாட்களுக்கு முன்பு வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால், பல ஓட்டல்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இந்த சூழலில், பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். பெட்ரோல், டீசல், காஸ் போன்றவற்றை பயன்படுத்தாமல் யாரும் இருக்க முடியாது' என்றார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய அரசு இந்த விலை உயர்வை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. எனவே, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி, விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் பெ.சண்முகம் வலியுறுத்தினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க-வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஆட்சி அமைக்காவிட்டால், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்து, பாஜக மறைமுகமாக ஆளக்கூடிய அவலநிலை ஏற்பட்டிருக்கும். இதைத் தடுப்பதற்காகவும், மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்தும் த.வெ.க-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை த.வெ.க நிறைவேற்ற வேண்டும். அதன் அடிப்படையில் தான் எங்கள் ஆதரவு தொடரும்' என பெ.சண்முகம் விளக்கினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Politicsதமிழக அரசியல்தவெகமார்க்சிஸ்ட் கட்சிவிஜய் ஆட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரவி மோகனின் குற்றச்சாட்டுகள் பொய்: ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் பதில்
Next Article 3வது குழந்தை பெற்றால் ரூ.30,000: ஆந்திராவில் அதிரடி அறிவிப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ரூ.182 கோடி ஜிகாதி போதைப்பொருள் சிக்கியது: அமித் ஷா தகவல்

இந்தியாவில் முதல் முறையாக ரூ.182 கோடி மதிப்பிலான 'ஜிகாதி போதைப்பொருள்' கேப்டகன் பறிமுதல்…

May 17, 2026

55% மதிப்பெண் எடுத்த மகனுக்கு பெற்றோர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

மும்பையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 55% மதிப்பெண்…

May 17, 2026

வேலையில்லா இளைஞர்கள் குறித்து தலைமை நீதிபதி விளக்கம்: என்ன சொன்னார்?

வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை…

May 17, 2026

மத்திய அமைச்சர் மகன் போக்சோ வழக்கில் கைது: பரபரப்பு!

தெலுங்கானா மாநில மத்திய இணை அமைச்சர் பண்டி…

May 17, 2026

நீட் முறைகேடு: மத்திய அமைச்சரை நீக்க மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

May 17, 2026

You Might Also Like

அரசியல்

தமிழகத்தில் முதலீடுகள்: முதல்வர் அழைப்பு! புதிய வாய்ப்புகள்?

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கவும், புதிய திட்டங்களை விரிவுபடுத்தவும் முதல்வர் ஸ்டாலின் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். BMW, Yamaha போன்ற நிறுவனங்களுடன் ஆலோசனை.

2 Min Read
அரசியல்

சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு, நீட் தேர்வு: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்!

சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு மற்றும் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் பிளவு: கே.சி.வீரமணி திடீர் ஆதரவு – ஈ.பி.எஸ்.க்கு ஷாக்!

அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

2 Min Read
அரசியல்

அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடமில்லை: வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழக அமைச்சரவையில் இடம் இல்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் புதிய அரசுக்கு ஆதரவு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?