MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுக உட்கட்சி பூசல்: நீக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியில் தொடர்வார்கள் – வேலுமணி, நத்தம் திடீர் அறிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > அதிமுக உட்கட்சி பூசல்: நீக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியில் தொடர்வார்கள் – வேலுமணி, நத்தம் திடீர் அறிக்கை!
அரசியல்

அதிமுக உட்கட்சி பூசல்: நீக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியில் தொடர்வார்கள் – வேலுமணி, நத்தம் திடீர் அறிக்கை!

Admin
Last updated: May 16, 2026 7:59 am
Admin
Share
SHARE

சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை மீறி, நீக்கப்பட்ட நிர்வாகிகள் தங்கள் பதவிகளில் தொடர்வார்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக இன்று தனிப்பட்ட சுயநலத்திற்காகவும், பதவி வெறிக்காகவும் செயல்படும் ஒரு சிலரால் இந்த வலிமையான கோட்டை அசைக்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து, பெரும்பான்மையான சட்டப்பேரவை உறுப்பினர்களும், முக்கிய நிர்வாகிகளும் பொதுச்செயலாளர் பழனிசாமியைச் சந்தித்து, அவரது தன்னிச்சையான முடிவுகளால் தான் இந்தத் தோல்வி நேர்ந்தது என்று கூறி, தோல்விக்கான காரணத்தை ஆராய அவசர பொதுக்குழு மற்றும் செயற்குழுவைக் கூட்ட வலியுறுத்தினோம். குறிப்பாக திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றும் வலியுறுத்தினோம். இதற்கு பொதுச்செயலாளர் உடன்படாததால் கருத்து வேறுபாடு தொடங்கியது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், "கடந்த 11-ம் தேதி அன்று பழனிசாமி, தற்காலிக பேரவைத் தலைவரை சந்தித்து 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக மனு அளித்ததன் மூலம் இந்தப் பிளவு பொதுவெளியில் தெரிந்தது. அதனால், 30 உறுப்பினர்கள் எங்கள் தரப்பு ஆதரவுக் கடிதத்தை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கட்சியின் முன்னோடிகள் உள்ளிட்ட 28 பேரை ஒரே கையெழுத்தில் நீக்கி பழனிசாமி அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்ற சட்டப்படி, ஒரு இயக்கத்தில் பிளவு ஏற்பட்ட நிலையில், ஒருவரை நீக்கவோ அல்லது சேர்க்கவோ இரு பிரிவினருக்கும் அதிகாரம் கிடையாது. கடந்த 2017-ம் ஆண்டிலும் இதுபோன்ற அறிவிப்புகள் செல்லாது என்று நீதிமன்றத்தாலும், தேர்தல் ஆணையத்தாலும் அறிவிக்கப்பட்டது. எனவே, பழனிசாமி வெளியிட்ட பதவி நீக்க அறிவிப்புகள் செல்லாது. நீக்கப்பட்டவர்கள், அவர்கள் வகித்த அதே பொறுப்புகளில் தொடர்வார்கள்" என்று தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், "அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல் அறிக்கை விட்டுள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம். ஆனால் தோல்வி வந்த பிறகு, தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து 'நான் மட்டுமே எல்லாம்' என்ற நிலையில் பேசுவதை எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். மக்கள் ஆதரவு பெற்ற திமுக அரசுக்கு ஆதரவளிப்பது என்ற அரசியல் அறத்தோடு அதிமுகவின் ஆதரவை பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, அதிமுகவை பிரிக்கும் எண்ணமோ எங்களுக்கு இல்லை. இப்பொழுதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை அனைவரும் சேர்ந்து ஆராய்வோம். அதிமுகவின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். உங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்றுதான். 'போங்க போங்க' என்று விரட்டியடிக்காமல், 'வாங்க வாங்க' என்று ஒருமுறை அழைத்து பாருங்கள். எல்லாமே மாறும்.. கட்சியும் நன்றாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKTamil Nadu Politicsஅதிமுகஅரசியல் செய்திகள்உட்கட்சி பூசல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கருப்பு: சூர்யாவின் மாஸ், பாலாஜியின் மிரட்டல் – ஒரு பார்வை!
Next Article திமுகவின் வீழ்ச்சி: ‘உடன்பிறப்பின் குரல்’ உண்மையை பேசுமா?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழகம் தவிர்த்து வடமாநிலங்களில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், வடமாநிலங்களில் உள்ள 3 தொகுதிகளுக்கு…

July 2, 2026

ஜனாதிபதி மாளிகையில் ஜப்பான் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த…

July 2, 2026

இடைத்தேர்தல் நடத்தக்கூடாது: தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்…

July 2, 2026

திருமண நாள் கொண்டாடிய 2 நாட்களில் இளம்பெண் தற்கொலை: கணவன் கைது

திருமண நாளைக் கொண்டாடிய 2 நாட்களிலேயே, கணவனின்…

July 2, 2026

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.96 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் மட்டும்…

July 2, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அண்ணாமலைக்கு வாழ்த்தும் இல்லை.. ஆதரவும் இல்லை- தமிழிசை

பாஜக மூத்த தலைவர் தமிழிசை, அண்ணாமலைக்கு வாழ்த்தும் இல்லை, ஆதரவும் இல்லை என்றும், அவர் வந்ததால் பாஜக பலம் அடையவில்லை என்றும் கூறியுள்ளார்.

1 Min Read
அரசியல்

அதிமுக உட்கட்சி மோதல்: ஈபிஎஸ், சண்முகம் தரப்பு ஆலோசனை – சபாநாயகர் முடிவுக்காக காத்திருப்பு!

அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பும், சி.வி.சண்முகம் தரப்பும் தனித்தனியாக தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர். சபாநாயகரின் முடிவை எதிர்பார்த்து காத்திருப்பு.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

இண்டியா கூட்டணியில் காங்கிரசுக்கு விசிக எதிர்ப்பு: திருமாவளவன் கருத்து

இண்டியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரசின் அணுகுமுறை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் அதிருப்தி தெரிவித்துள்ளார். மாநில கட்சிகளை காங்கிரஸ் பலவீனப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.

2 Min Read
அரசியல்

விஜய் மீது சிபிஐ வழக்கு?: அதிமுக எம்.பி. கருத்தால் சர்ச்சை

முதல்வர் ஸ்டாலின் மீது சிபிஐ வழக்கு தொடர வாய்ப்புள்ளதாக அதிமுக எம்.பி. இன்பதுரை கருத்து தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?