MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுக உட்கட்சி பூசல்: நீக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியில் தொடர்வார்கள் – வேலுமணி, நத்தம் திடீர் அறிக்கை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுக உட்கட்சி பூசல்: நீக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியில் தொடர்வார்கள் – வேலுமணி, நத்தம் திடீர் அறிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - அதிமுக உட்கட்சி பூசல்: நீக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியில் தொடர்வார்கள் – வேலுமணி, நத்தம் திடீர் அறிக்கை!

அரசியல்

அதிமுக உட்கட்சி பூசல்: நீக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியில் தொடர்வார்கள் – வேலுமணி, நத்தம் திடீர் அறிக்கை!

Admin
Last updated: மே 16, 2026 7:59 காலை
Admin
Share
SHARE

சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை மீறி, நீக்கப்பட்ட நிர்வாகிகள் தங்கள் பதவிகளில் தொடர்வார்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக இன்று தனிப்பட்ட சுயநலத்திற்காகவும், பதவி வெறிக்காகவும் செயல்படும் ஒரு சிலரால் இந்த வலிமையான கோட்டை அசைக்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து, பெரும்பான்மையான சட்டப்பேரவை உறுப்பினர்களும், முக்கிய நிர்வாகிகளும் பொதுச்செயலாளர் பழனிசாமியைச் சந்தித்து, அவரது தன்னிச்சையான முடிவுகளால் தான் இந்தத் தோல்வி நேர்ந்தது என்று கூறி, தோல்விக்கான காரணத்தை ஆராய அவசர பொதுக்குழு மற்றும் செயற்குழுவைக் கூட்ட வலியுறுத்தினோம். குறிப்பாக திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றும் வலியுறுத்தினோம். இதற்கு பொதுச்செயலாளர் உடன்படாததால் கருத்து வேறுபாடு தொடங்கியது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், "கடந்த 11-ம் தேதி அன்று பழனிசாமி, தற்காலிக பேரவைத் தலைவரை சந்தித்து 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக மனு அளித்ததன் மூலம் இந்தப் பிளவு பொதுவெளியில் தெரிந்தது. அதனால், 30 உறுப்பினர்கள் எங்கள் தரப்பு ஆதரவுக் கடிதத்தை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கட்சியின் முன்னோடிகள் உள்ளிட்ட 28 பேரை ஒரே கையெழுத்தில் நீக்கி பழனிசாமி அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்ற சட்டப்படி, ஒரு இயக்கத்தில் பிளவு ஏற்பட்ட நிலையில், ஒருவரை நீக்கவோ அல்லது சேர்க்கவோ இரு பிரிவினருக்கும் அதிகாரம் கிடையாது. கடந்த 2017-ம் ஆண்டிலும் இதுபோன்ற அறிவிப்புகள் செல்லாது என்று நீதிமன்றத்தாலும், தேர்தல் ஆணையத்தாலும் அறிவிக்கப்பட்டது. எனவே, பழனிசாமி வெளியிட்ட பதவி நீக்க அறிவிப்புகள் செல்லாது. நீக்கப்பட்டவர்கள், அவர்கள் வகித்த அதே பொறுப்புகளில் தொடர்வார்கள்" என்று தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், "அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல் அறிக்கை விட்டுள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம். ஆனால் தோல்வி வந்த பிறகு, தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து 'நான் மட்டுமே எல்லாம்' என்ற நிலையில் பேசுவதை எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். மக்கள் ஆதரவு பெற்ற திமுக அரசுக்கு ஆதரவளிப்பது என்ற அரசியல் அறத்தோடு அதிமுகவின் ஆதரவை பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, அதிமுகவை பிரிக்கும் எண்ணமோ எங்களுக்கு இல்லை. இப்பொழுதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை அனைவரும் சேர்ந்து ஆராய்வோம். அதிமுகவின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். உங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்றுதான். 'போங்க போங்க' என்று விரட்டியடிக்காமல், 'வாங்க வாங்க' என்று ஒருமுறை அழைத்து பாருங்கள். எல்லாமே மாறும்.. கட்சியும் நன்றாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKTamil Nadu Politicsஅதிமுகஅரசியல் செய்திகள்உட்கட்சி பூசல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கருப்பு: சூர்யாவின் மாஸ், பாலாஜியின் மிரட்டல் – ஒரு பார்வை!
Next Article திமுகவின் வீழ்ச்சி: ‘உடன்பிறப்பின் குரல்’ உண்மையை பேசுமா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்குவங்காளத்தில் தீ விபத்துக்குள்ளான ஓட்டல் கட்டிடம்

மேற்குவங்க ஓட்டல் தீ விபத்து: 6 பக்தர்கள் உயிரிழப்பு

மேற்குவங்காளத்தின் தரபதி கோவில் அருகே ஓட்டலில் பயங்கர தீ விபத்து. 6 பக்தர்கள்…

ஆகஸ்ட் 17, 2026

பிஹார் கோயில் விபத்து: 7 பக்தர்கள் பலி, 10 பேர் காயம்

பிஹார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக்…

ஆகஸ்ட் 17, 2026

பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை லேபிள்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு…

ஆகஸ்ட் 17, 2026

இந்தியா-தாய்லாந்து ராணுவ பயிற்சி: சூரத் தனியில் நாளை தொடக்கம்

இந்தியா-தாய்லாந்து இடையே 15வது கூட்டு ராணுவப் பயிற்சி…

ஆகஸ்ட் 17, 2026

சொத்துக் குவிப்பு வழக்கு: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் தடை

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

முதல்-அமைச்சர் விஜய் த.வெ.க. கட்சி மாவட்டங்கள் உருவாக்கம் குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

நிர்வாக வசதி: த.வெ.க.வில் மேலும் 27 மாவட்டங்கள் உருவாக்கம்

தமிழகத்தில் நிர்வாக வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், த.வெ.க. கட்சி சார்பில் மேலும் 27 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் விஜய் இந்த புதிய மாவட்டங்களுக்கு செயலாளர்கள் மற்றும்…

1 Min Read
அரசியல்

தமிழக முதல்வர் விஜய் பதவியேற்பு விழா தருணங்கள் – புகைப்பட தொகுப்பு

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை…

3 Min Read
சிபிஐ எம்.பி. கே.சுப்பராயன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

அரசு வேலை வழங்குவது அதிகார துஷ்பிரயோகம்: சிபிஐ எம்பி சுப்பராயன் கண்டனம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை சிபிஐ எம்பி சுப்பராயன் அதிகார துஷ்பிரயோகம் என விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள்…

2 Min Read
தமிழ்நாடு

எடப்பாடியின் கனவு தகர்ந்தது: அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அகந்தையே அதிமுகவின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும், அவரது கனவு தகர்ந்துவிட்டது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?