MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுகவின் வீழ்ச்சி: ‘உடன்பிறப்பின் குரல்’ உண்மையை பேசுமா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுகவின் வீழ்ச்சி: ‘உடன்பிறப்பின் குரல்’ உண்மையை பேசுமா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - திமுகவின் வீழ்ச்சி: ‘உடன்பிறப்பின் குரல்’ உண்மையை பேசுமா?

அரசியல்

திமுகவின் வீழ்ச்சி: ‘உடன்பிறப்பின் குரல்’ உண்மையை பேசுமா?

Admin
Last updated: மே 16, 2026 8:00 காலை
Admin
Share
SHARE

சமீபத்திய தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, தோல்விக்கான காரணங்களை ஒவ்வொரு தொகுதியாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க 38 பேர் கொண்ட 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தொண்டர்களின் கருத்துக்களை நேரடியாக பதிவு செய்ய 'உடன்பிறப்பின் குரல்' என்ற புதிய இணையதளத்தையும் தொடங்கியுள்ளார்.

ஆனால், தோல்விக்கான காரணங்களைத் தேடும் முன், திமுக தலைமை சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில், கட்சிக்குள் கருத்து சுதந்திரம் இருந்தது. யாராக இருந்தாலும் அவர்களைப் பேசவிட்டு, மாற்றுக் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பார். தொண்டர்களின் கருத்துக்கள் நேரடியாக கட்சித் தலைமையை சென்றடைய வேண்டும் என்பதற்காக, மாவட்ட செயலாளர்களுக்கு போட்டியாக வளர்ந்தவர்களையும் அவர் பாதுகாத்தார். இது கட்சிக்குள் சில சமயங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும், கட்சியை வளர்க்க உதவியது.

ஒரு காலத்தில், தேர்தல் கணிப்புகளை துல்லியமாக சொல்லக்கூடிய வல்லுநர்கள் திமுகவில் இருந்தனர். ஆனால், வணிக ரீதியான வியூகம் வகுக்கும் நிறுவனங்கள் கட்சிக்குள் நுழைந்து 'கட்டளைகளை' பிறப்பிக்க ஆரம்பித்த பிறகு, கட்சியின் ஆரோக்கியம் கெட்டுவிட்டது. நிர்வாகிகளும் 'எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்' என்ற பாணியில் சொகுசு வாழ்க்கைக்கு பழகியதால், கிழிந்து தொங்கும் கட்சி கொடிகளை மாற்றக்கூட ஆளில்லாமல் போனது. சாதாரண கரைவேட்டியை அடையாளமாகக்கொண்ட கருணாநிதியின் காலம் மாறி, வியூக வல்லுநர்கள் சொன்ன இடங்களில் சைக்கிள் ஓட்டுவது, டீ குடிப்பது, செல்ஃபி எடுப்பது என திமுகவின் இயல்பு மாறியது.

புகைப்படங்கள், வீடியோ ஷூட்களை விரும்பும் தலைமையை திருப்திப்படுத்த, மாவட்ட செயலாளர்கள் தொண்டர்களுக்கு தலா 300 ரூபாய் கொடுத்து போலியான கூட்டத்தை காட்டினார்கள். இதனால், உண்மை நிலவரம் தலைமையை சென்றடையவில்லை. குறைகளை சொல்ல நினைப்பவர்களை ஊக்குவிக்காமல், மாவட்ட செயலாளர்கள் சொல்வதை மட்டுமே நம்பும் சூழல் ஏற்பட்டது. உண்மையை சொல்பவர்கள் மீது 'உள்ளடி வேலை' முத்திரை குத்தப்பட்டது. அமைச்சராக வேண்டும் என நினைத்தவர்கள், தங்கள் மாவட்டத்தில் யாரும் உயர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். எதிர்க் கட்சியுடன் பேசி, தங்கள் தொகுதிகளில் 'சொத்தான' வேட்பாளர்களை நிறுத்தி, சொந்தக் கட்சிக்குள் இருக்கும் போட்டியாளர்களை வலுவானவர்களை நிறுத்தி வீழ்த்தவும் முயன்றனர். கட்சிக்கு உழைத்த பல பாரம்பரிய திமுக குடும்பங்கள் காணாமல் போயின.

தேர்தல் நேரத்தில், 'உடன்பிறப்பே வா' என்று நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்டீர்கள். அப்போதும் மாவட்ட செயலாளர்களுக்கு சிலர் 'துப்பு' கொடுத்ததால், உண்மையை சொல்ல வந்தவர்கள் உங்களிடம் உண்மை சொல்லாமல் திரும்பினர். மேலும், கூட்டணிக் கட்சிகளுக்கும் தாராளமாக செலவு செய்தீர்கள். அதை திமுக நிர்வாகிகள் 'எங்க பணம் தானே' என்று சொல்லி பதுக்கிக் கொண்டார்கள். தேர்தல் தோல்விக்கான காரணங்களைத் தேடும் முன், கூட்டணிக் கட்சிகளை ஜெயிக்க வைத்துவிட்டு, 'நம்மால் ஜெயித்துவிட்டு இப்படி போய்விட்டோமே…' என்று வேதனையில் இருக்கும் திமுகவினரை முதலில் அழைத்து ஆறுதல் படுத்துங்கள். அவர்கள் நீங்கள் சொன்னதால் உழைத்துவிட்டு, 'கொளத்தூர் வேதனைக்கு' நிகரான வலியில் உள்ளனர். எனவே, வேர்ப்பூச்சிக்கு வைத்தியம் பார்க்காமல் மேலோட்டமாக மகசூலுக்கு மருந்தடிப்பது நீடித்த பலனைத் தராது என்பதை புரிந்துகொண்டு, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அப்டேட் ஆக வேண்டும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKTamil Nadu Politicsஉடன்பிறப்பின் குரல்திமுகதேர்தல் தோல்வி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுக உட்கட்சி பூசல்: நீக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியில் தொடர்வார்கள் – வேலுமணி, நத்தம் திடீர் அறிக்கை!
Next Article CSK vs LSG: ஒரே ஓவரில் 28 ரன்கள்.. மார்ஷ் அதிரடி.. சென்னை வெற்றி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாரதிய ஜனதா கட்சி தேசிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு

பாஜக தேசிய நிர்வாகிகள்: 65-ல் 12 பெண்கள் நியமனம்

பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு: 65 பேரில் 12 பெண்கள் நியமனம்.…

ஆகஸ்ட் 17, 2026

மேற்குவங்க ஓட்டல் தீ விபத்து: 6 பக்தர்கள் உயிரிழப்பு

மேற்குவங்காளத்தின் தரபதி கோவில் அருகே ஓட்டலில் பயங்கர…

ஆகஸ்ட் 17, 2026

பிஹார் கோயில் விபத்து: 7 பக்தர்கள் பலி, 10 பேர் காயம்

பிஹார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக்…

ஆகஸ்ட் 17, 2026

பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை லேபிள்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு…

ஆகஸ்ட் 17, 2026

இந்தியா-தாய்லாந்து ராணுவ பயிற்சி: சூரத் தனியில் நாளை தொடக்கம்

இந்தியா-தாய்லாந்து இடையே 15வது கூட்டு ராணுவப் பயிற்சி…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சினேகா மோகன்தாஸ் விலகல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளராக இருந்த சினேகா மோகன்தாஸ், தனது பதவிகளை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 'ஃபுட் பேங்க்…

2 Min Read
அரசியல்

தமிழகத்தில் தொடரும் கொடூரங்கள்: ஆளும் அரசின் மெத்தனத்தை கண்டித்த நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், ஆளும் அரசின் மெத்தனப் போக்கையும், தவெக நிர்வாகிகளின் அராஜகத்தையும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டித்துள்ளார். சிறுமிகளுக்கு எதிரான…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை தவெகவில் இணைகிறார்

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். அவருடன்…

1 Min Read
தமிழ்நாடு

தவெக அமைச்சர் பதவி விலகக் கோரி திமுக மாணவரணி போராட்டம்

தவெக அமைச்சர் டி. சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ விவகாரத்தை அடுத்து, அவரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி ஜூன் 29 அன்று…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?