MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஏற்காடு மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > ஏற்காடு மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல்
தமிழ்நாடு

ஏற்காடு மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல்

Admin
Last updated: May 25, 2026 12:35 pm
Admin
Share
SHARE

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் 49-வது மலர் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சியை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர்.

ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் வண்ணமயமான மலர்களால் ஆன பல்வேறு வடிவங்கள் சுற்றுலாப் பயணிகளை பரவசப்படுத்துகின்றன. இதில் டெடிபியர் பொம்மை, விவசாயி உழவு செய்தல், கன்று குட்டியுடன் கறவை மாடு, பண்ணை வீடு, கற்பனை தேவதை, பரதநாட்டிய மங்கைகள், புளூட்டோ, கூபி போன்ற வடிவங்களும், இரட்டை இதயம் வடிவிலான செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதோடு, தங்கள் செல்போன்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

மலர் கண்காட்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் மட்டும் 22 ஆயிரத்து 600 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரியவர்களுக்கு ரூ.60 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் இந்த திடீர் வருகையால் ஏற்காடு மலைப்பாதை மற்றும் நகரப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏற்காடு டவுன் பகுதி, ஏரிச்சாலை, அண்ணா பூங்கா சந்திப்பு, படகு இல்லம் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகளில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Yercaud Flower Showஏற்காடுசுற்றுலாசேலம்போக்குவரத்து நெரிசல்மலர் கண்காட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் பழங்குடியினர் பொருட்கள் விற்பனை மையம் திறப்பு
Next Article மின் உற்பத்தியில் தன்னிறைவு: புதிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 2-வது நாளாக போராட்டம்

டெல்லியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'யினர் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

June 21, 2026

உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் 16 கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை

மத்திய அரசு, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்…

June 21, 2026

திரிணாமுல் காங்கிரஸ் வங்கிக்கணக்குகள் முடக்கம்: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புகார்

திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சிப்பூசல் காரணமாக, அக்கட்சியின் மூன்று…

June 21, 2026

மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் 3 புதிய கடற்படை கப்பல்கள்

பிரதமர் மோடி, INS Dunagiri, INS Agray,…

June 21, 2026

விலைவாசி உயர்வு: மத்திய அரசின் நிர்வாகத்தை கார்கே கண்டித்தார்

மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால் விலைவாசி உயர்வு…

June 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்த வைகோ: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் சந்திப்பு

தமிழக முதல்வர் விஜய்யை இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

11 வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தாய் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி சத்யா. இவர்களது மகள் வர்ஷினி (வயது 11). இவர் கண்டாச்சிபுரம் பகுதியில்…

2 Min Read
தமிழ்நாடு

ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!

பல்லடத்தில், குடும்ப தகராறில் மாமியாரை தாக்கிய ஐஸ் வியாபாரியை, மைத்துனர்கள் அடித்து கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடிய சம்பவம் அம்பலமாகியுள்ளது. இருவர் கைது.

2 Min Read
தமிழ்நாடு

மனைவி பிரிந்ததால் மனமுடைந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த ஆட்டோ டிரைவர் வெயில்முத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?