MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சேலத்தில் மதுபோதையில் பயங்கரம்: 17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > க்ரைம் > சேலத்தில் மதுபோதையில் பயங்கரம்: 17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள்
க்ரைம்

சேலத்தில் மதுபோதையில் பயங்கரம்: 17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள்

Admin
Last updated: May 12, 2026 7:26 am
Admin
Share
SHARE

சேலம்: சேலத்​தில் மது​போதை​யில் இருந்த 3 சிறு​வர்​கள் மற்​றொரு சிறு​வனை கொடூ​ராக கொலை செய்த சம்​பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்​படுத்​தி உள்​ளது. 3 சிறுவர்​களையும் போலீ​ஸார் கைது செய்து விசா​ரிக்​கின்​றனர்.

சேலம் மணி​யனூரைச் சேர்ந்த 16 வயது சிறு​வன் மல்​லூர் அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் 10-ம் வகுப்பு படித்து வந்​தார். அதே பகு​தி​யைச் சேர்ந்த தனி​யார் பள்​ளி​யில் 9-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறு​வன் மற்​றும் மணி​யனூரில் வசிக்​கும் பிஹாரைச் சேர்ந்த 16 வயது சிறு​வன் ஆகிய 3 பேரும் நண்​பர்​கள்​.

இவர்​கள் 3 பேரும் நேற்று முன்​தினம் இரவு மல்​லூர் அருகே உள்ள கெஜ்ஜல்​நாயக்​கன்​பட்டி காட்​டு​வளவு பகு​தி​யில் மது அருந்​தி​யுள்​ளனர். அவர்​களு​டன் ஏற்​கெனவே பழக்​கம் உள்ள பிளஸ் 1 படிக்​கும் சீல​நாயக்​கன்​பட்டி பகு​தி​யைச் சேர்ந்த கோகுல் (17) என்ற சிறு​வனும் வந்​துள்​ளார்.

மது​போதை​யில் இருந்த 3 சிறு​வர்​களுக்கும், கோகுலுக்கும் இடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது. இதில் ஆத்​திரமடைந்த 3 சிறு​வர்​களும் சேர்ந்து கோகுலை கத்​தி​யால் குத்​தி​யும், முகத்தை சிதைத்​தும் கொலை செய்​துள்​ளனர். பின்​னர், சிறு​வனின் உடலை வைத்து வீடியோ எடுத்து கூச்​சலிட்​டுள்​ளனர்.

சத்​தம் கேட்டு அப்​பகுதி மக்​கள் திரண்டு வந்த நிலை​யில், 3 சிறு​வர்​களும் அங்​கிருந்து ஓட முயன்​றுள்​ளனர். அவர்​களில் 2 பேரை பிடித்து மல்​லூர் காவல்நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

கொலை​யான கோகுலின் உடலை போலீ​ஸார் மீட்டு பரிசோதனைக்​காக சேலம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இதனிடையே தப்பி ஓடிய மற்​றொரு சிறு​வனை நேற்று போலீ​ஸார் கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். கைதான 3 சிறு​வர்​களை​யும் அரசு கூர்​நோக்கு இல்​லத்​துக்கு அனுப்ப போலீ​ஸார் நடவடிக்கை எடுத்து வரு​கின்​றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
Next Article திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

க்ரைம்

ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் சோகம்: மின் கசிவால் இளைஞர் பலி!

‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் மின் கசிவு ஏற்பட்டதில், பணியில் ஈடுபட்டிருந்த சேலத்தைச் சேர்ந்த இளைஞர் கார்த்திகேயன் (29) பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

1 Min Read
க்ரைம்

ஆவடியில் 140 கிலோ கஞ்சா, 2000 மாத்திரைகள்: 6 பேர் கைது!

ஆவடி அருகே 140 கிலோ கஞ்சா மற்றும் 2,000 போதை மாத்திரைகளை கடத்தி வந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர…

1 Min Read
க்ரைம்

டெல்லியில் ஸ்லீப்பர் பஸ்ஸில் கொடூரம்: பெண் பலாத்காரம்!

டெல்லியில் பணி முடிந்து வீடு திரும்பிய 30 வயது பெண், ஸ்லீப்பர் பேருந்தில் கடத்தப்பட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
க்ரைம்

பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கிய 25 வங்கதேசத்தவருக்கு 2 ஆண்டு சிறை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 25 வங்கதேச நாட்டினருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூர் மாவட்ட…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?