MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை
இந்தியா

திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை

Admin
Last updated: May 12, 2026 7:52 am
Admin
Share
SHARE

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் கொண்டபாக்க கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி (21 வயது), தையல் தொழிலாளி. கோமூர் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வினய் (23 வயது), கூலித் தொழிலாளி. கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்த இவர்கள், இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த மாதம் 9-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான சில நாட்களிலேயே அஞ்சலி செல்போனில் நீண்ட நேரம் பேசுவதாக வினய் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 7-ந்தேதி ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த வினய் தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துள்ளார்.

தொடர்ந்து, வினய் தனது மனைவியை போனில் தொடர்பு கொண்டு சமாதானம் செய்ய முயன்றபோது, அஞ்சலி கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வினய் போன் செய்தபோது அஞ்சலி அதனை எடுக்கவில்லை. இதற்கிடையே இந்த சம்பவத்தில் கடும் மனஉளைச்சலில் இருந்த அஞ்சலி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஐதராபாத்தில் வேலையை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த வினய்க்கு, தனது மனைவி தற்கொலை செய்துகொண்ட தகவல் கிடைத்தது. ராயபுரம் கிராமம் அருகே வந்தபோது இந்த தகவலை கேட்ட அவர் அதிர்ச்சியில் உறைந்தார். உடனே தனது தந்தையை போனில் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறி கதறி அழுதுள்ளார். பின்னர், தான் இருக்கும் இடத்தின் ‘லொகேசனை’ நண்பர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிவிட்டு, அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேலத்தில் மதுபோதையில் பயங்கரம்: 17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள்
Next Article திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபத்தில் உயிரிழந்த மணமகன்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

இந்தியா

ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

1 Min Read
இந்தியா

ஃபால்டா மறுதேர்தலில் பாஜக வெற்றி: ஜனநாயகம் வென்றது – மோடி

மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதிக்கான மறுதேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயகம் வென்றதாகவும், அச்சுறுத்தல் தோல்வியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 Min Read
இந்தியா

பண மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு டெல்லி கோர்ட்டில் ஜாமீன்!

அரியானா மாநில நில மோசடி தொடர்பான பணப் பரிவர்த்தனை வழக்கில், ராபர்ட் வதேராவுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை…

1 Min Read
இந்தியா

சீமான் மீதான வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாம் தமிழர் கட்சியின் சீமான் மீதான அவதூறு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. வழக்கை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?