MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஷரியா சட்டத்தை பயன்படுத்தி ரூ.6,000 கோடி மோசடி: ஹைதராபாத் பெண் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > ஷரியா சட்டத்தை பயன்படுத்தி ரூ.6,000 கோடி மோசடி: ஹைதராபாத் பெண் கைது
இந்தியா

ஷரியா சட்டத்தை பயன்படுத்தி ரூ.6,000 கோடி மோசடி: ஹைதராபாத் பெண் கைது

Admin
Last updated: May 26, 2026 1:31 pm
Admin
Share
SHARE

ஷரியா சட்டத்தை முன்னிறுத்தி சுமார் ரூ.6,000 கோடி மோசடி செய்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த ஆலிமா நவ்ஹேரா ஷேக் (52) என்ற பெண் குருகிராமில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹீரா குழும நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார்.

ஹீரா குழுமம் தங்கம், ஜவுளி, கிரானைட், சுற்றுலா, ரியல் எஸ்டேட் மற்றும் இணைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக ஆலிமா விளம்பரப்படுத்தினார். முஸ்லிம்களின் ஷரியா சட்டப்படி வட்டி பெறுவது குற்றம் என்றும், ஆனால் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் வட்டிக்கு பதிலாக ஆண்டுக்கு 36% ஈவுத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த கவர்ச்சிகரமான விளம்பர உத்தியால் ஈர்க்கப்பட்ட சுமார் 1.75 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஹீரா குழுமத்தில் ரூ.6,000 கோடிக்கு மேல் முதலீடு செய்தனர்.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை வழங்கப்படவில்லை. முதலீட்டாளர்கள் வழங்கிய பணத்தை தனது சொந்த கணக்குகளுக்கு மாற்றிய ஆலிமா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்தார். இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை தனி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதன் பேரில் அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன.

பல்வேறு வழக்குகளில் ஜாமீன் பெற்ற ஆலிமா மீது, தெலங்கானாவின் வாரங்கல் காவல் நிலையத்தில் 2021-ல் தங்க முதலீடு மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த வாரங்கல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. மேலும் ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றமும் கைது வாரண்ட் பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில், ஹரியானாவில் அவர் பதுங்கி இருப்பதாக அமலாக்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெலங்கானா மற்றும் ஹரியானா போலீசாருடன் இணைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலிமாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Newsகைதுமோசடிஷரியா சட்டம்ஹீரா குழுமம்ஹைதராபாத்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry1
Surprise1
Cry0
Wink0
Previous Article விவசாயக் கடன் தள்ளுபடி: விஞ்ஞான ஏமாற்று வேலை – இபிஎஸ் குற்றச்சாட்டு
Next Article தமிழகத்தில் எளிதாக ஆட்சிக்கு வரலாம் – பவன் கல்யாண் பேச்சு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

வெப்ப அலையால் தவிப்பு: மக்கள் கவனத்துடன் இருக்க மோடி வேண்டுகோள்

நாடு முழுவதும் வெப்ப அலை கடுமையாக வீசி வருவதால், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்…

2 Min Read
இந்தியா

மணிப்பூரில் பதற்றம்: 3 தேவாலய தலைவர்கள் சுட்டுக்கொலை – தேசிய நெடுஞ்சாலை முடக்கம்

மணிப்பூரில் 3 தேவாலய தலைவர்கள் ஆயுதக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, முக்கிய தேசிய நெடுஞ்சாலை 2 முடக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மேலும் விசாரணை…

1 Min Read
இந்தியா

தமிழக கவர்னருக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் அக்கட்சி ஆட்சி அமைக்க கோரி கவர்னரிடம் கடிதம் அளித்த…

1 Min Read
இந்தியா

பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!

பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, வைரலாகி வருகிறது. காவல்துறை தீவிர விசாரணை.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?