உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபதேபூரைச் சேர்ந்த அவதேஷ் என்பவரை, 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார் பிரீத்தி. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. கூலி வேலை செய்து வந்த அவதேஷ், தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, தனது மனைவி பிரீத்தியை கடுமையாகத் தாக்கி துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. கணவனின் தொடர்ச்சியான கொடுமைகளால் மனமுடைந்த பிரீத்தி, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தார். சம்பவத்தன்று, தனது கணவன் அவதேஷ் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார். இந்த கொடூர சம்பவம் ஜூன் 26ஆம் தேதி நடந்துள்ளது. கணவனை எரித்துக் கொன்ற கொடூரத்தை மறைக்க பிரீத்தி முயற்சித்துள்ளார். ஆனால், அவளது நடவடிக்கைகளில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரீத்தியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிரீத்தி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி கைது
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
கருத்துகள் இல்லை
சமிபத்திய செய்திகள்
சற்றுமுன்
சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும், 'மேக் இன் இந்தியா' போன்ற…
குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!
உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…
மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்
மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…
அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!
அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…
உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்
உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…