உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபதேபூரைச் சேர்ந்த அவதேஷ் என்பவரை, 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார் பிரீத்தி. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. கூலி வேலை செய்து வந்த அவதேஷ், தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, தனது மனைவி பிரீத்தியை கடுமையாகத் தாக்கி துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. கணவனின் தொடர்ச்சியான கொடுமைகளால் மனமுடைந்த பிரீத்தி, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தார். சம்பவத்தன்று, தனது கணவன் அவதேஷ் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார். இந்த கொடூர சம்பவம் ஜூன் 26ஆம் தேதி நடந்துள்ளது. கணவனை எரித்துக் கொன்ற கொடூரத்தை மறைக்க பிரீத்தி முயற்சித்துள்ளார். ஆனால், அவளது நடவடிக்கைகளில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரீத்தியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிரீத்தி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You Might Also Like
திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆகஸ்டு மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை ஆகஸ்டு மாதம் தரிசிக்க பக்தர்களுக்கான பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், தங்கும் விடுதி வசதிகளுக்கான ஆன் லைன் கோட
1 Min Read
நடைபாதை வியாபாரிகளுக்காக களமிறங்கிய மம்தா பானர்ஜி!
நடைபாதை வியாபாரிகளை காலி செய்ய உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டார். இது வியாபாரிகளிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
1 Min Read
செல்போன் பழக்கத்திற்கு எதிராக 16 கி.மீ ஓடிய மாணவன்
செல்போன் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், லாத்தூரைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு மாணவன் அரவிந்த் 16 கிலோமீட்டர் தூரம் ஓடி பள்ளிக்குச் சென்றுள்ளார். இது…
1 Min Read
அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: மக்கள் அச்சத்தில்!
அருணாச்சல பிரதேசத்தின் லோகிட் மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
1 Min Read

