புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசியல் இலட்சியங்களால் தனது பொதுவாழ்வுப் பயணத்தை தொடங்கிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், 35 ஆண்டுகளாக மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளார். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவராகவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், விராலிமலை மக்களின் பேராதரவோடும் நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: 'நேற்று போலவே… இன்று இன்னும் உறுதியாக… நாளை இன்னும் வலிமையாக… மண்ணுக்கான..மக்களுக்கான என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்!' எனத் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாகவும், மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாகவும் திகழும் முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையை ஏற்று, விஜயபாஸ்கர் தனது அரசியல் பயணத்தைத் தொடரவுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


