ஆட்சி அமைக்க விஜயை அழைக்காதது ஏன்? என்பது குறித்து ஆளுநர் ராஜேந்திர விசுவநாத் அர்லேகர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், விஜய்க்கு ஆதரவு அளிக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வர வேண்டியது இல்லை என்றார்.
எந்த, எந்த கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களை விஜய் தர வேண்டுமென்பதை மட்டுமே தான்எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
பெரும்பான்மை இல்லாத ஒருவரை ஆட்சி அமைக்க அனுமதித்தால், குதிரை பேரம் நடக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சட்டசபையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாதது விஜயின் பிரச்சனை மட்டுமல்ல, மக்களின் பிரச்சனையும் கூட என்று அவர் தெரிவித்தார்.