இந்தியாவின் புதிய ‘பாதுகாப்பு கவசம்’.. ரஃபேல் முதல் சுதர்சன் சக்ரா வரை – அதிரும் எதிரி நாடுகள்!
- Published by:
Last Updated:May 07, 2026 8:15 PM ISTநவீன ஆயுதங்களின் சேர்க்கை மற்றும் வலிமையான பாதுகாப்பு கவசம் இந்தியாவை உலக அரங்கில் ஒரு பெரும் சக்தியாக மாற்றியுள்ளது.
+ Follow usOn Google1/9

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை முடிந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியப் பாதுகாப்புத் துறை அடைந்துள்ள அபரிமிதமான வளர்ச்சி மற்றும் படையில் இணைந்துள்ள நவீன ஆயுதங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.advertisement2/9
இந்தியக் கடல் எல்லையைப் பாதுகாப்பதற்காக பிரான்ஸ் நாட்டிடமிருந்து சுமார் 63,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 ரஃபேல் மரைன் (Rafale Marine) போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2025 ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்டது.advertisement3/9
இதுதவிர, இந்திய விமானப்படையின் வலிமையை அதிகரிக்க மேலும் 114 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (DAC) இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்துள்ளது.advertisement4/9
கடந்த ஓராண்டில், உலகின் அதிவேக ஏவுகணையான பிரம்மோஸ் (Brahmos) உற்பத்தியை இந்தியா பன்மடங்கு அதிகரித்துள்ளது. எதிரி நாட்டு ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்கும் ஆகாஷ் (Akash) வான் பாதுகாப்பு அமைப்பின் புதிய பிரிவுகளும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.advertisement5/9
குறிப்பாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் ஏவுகணைகளைத் தடுத்ததில் ரஷ்யாவின் S-400 அமைப்பின் பங்கு மிக முக்கியமானது. இதனால், மேலும் 5 புதிய S-400 பாதுகாப்பு அமைப்புகளை வாங்க இந்தியா அனுமதி அளித்துள்ளது.advertisement6/9
இஸ்ரேலின் ‘அயன் டோம்’ (Iron Dome) போல, இந்தியா தனது சொந்த வான் பாதுகாப்பு கவசமான ‘சுதர்சன் சக்ரா’வை உருவாக்கி வருகிறது.advertisement7/9
டிஆர்டிஓ (DRDO) மூலம் உருவாக்கப்படும் இது செயற்கை நுண்ணறிவு (AI), செயற்கைக்கோள் மற்றும் ரேடார் உதவியுடன் மூன்று நிலைகளில் பாதுகாப்பை வழங்கும். 2035-ஆம் ஆண்டுக்குள் இது முழுமையாகத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.advertisement8/9
இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, 2026-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்காக 7.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 15% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.advertisement9/9
இதில் டிஆர்டிஓ (DRDO) ஆராய்ச்சிப் பணிகளுக்காக மட்டும் 29 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன ஆயுதங்களின் சேர்க்கை மற்றும் வலிமையான பாதுகாப்பு கவசம் இந்தியாவை உலக அரங்கில் ஒரு பெரும் சக்தியாக மாற்றியுள்ளது.