இந்தியாவின் புதிய ‘பாதுகாப்பு கவசம்’.. ரஃபேல் முதல் சுதர்சன் சக்ரா வரை – அதிரும் எதிரி நாடுகள்!

இந்தியாவின் புதிய ‘பாதுகாப்பு கவசம்’.. ரஃபேல் முதல் சுதர்சன் சக்ரா வரை – அதிரும் எதிரி நாடுகள்!

  • Published by:

Last Updated:May 07, 2026 8:15 PM ISTநவீன ஆயுதங்களின் சேர்க்கை மற்றும் வலிமையான பாதுகாப்பு கவசம் இந்தியாவை உலக அரங்கில் ஒரு பெரும் சக்தியாக மாற்றியுள்ளது.On Google1/9

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை முடிந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியப் பாதுகாப்புத் துறை அடைந்துள்ள அபரிமிதமான வளர்ச்சி மற்றும் படையில் இணைந்துள்ள நவீன ஆயுதங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.advertisement2/9

இந்தியக் கடல் எல்லையைப் பாதுகாப்பதற்காக பிரான்ஸ் நாட்டிடமிருந்து சுமார் 63,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 ரஃபேல் மரைன் (Rafale Marine) போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2025 ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்டது.advertisement3/9

இதுதவிர, இந்திய விமானப்படையின் வலிமையை அதிகரிக்க மேலும் 114 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (DAC) இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்துள்ளது.advertisement4/9

கடந்த ஓராண்டில், உலகின் அதிவேக ஏவுகணையான பிரம்மோஸ் (Brahmos) உற்பத்தியை இந்தியா பன்மடங்கு அதிகரித்துள்ளது. எதிரி நாட்டு ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்கும் ஆகாஷ் (Akash) வான் பாதுகாப்பு அமைப்பின் புதிய பிரிவுகளும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.advertisement5/9

குறிப்பாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் ஏவுகணைகளைத் தடுத்ததில் ரஷ்யாவின் S-400 அமைப்பின் பங்கு மிக முக்கியமானது. இதனால், மேலும் 5 புதிய S-400 பாதுகாப்பு அமைப்புகளை வாங்க இந்தியா அனுமதி அளித்துள்ளது.advertisement6/9

இஸ்ரேலின் ‘அயன் டோம்’ (Iron Dome) போல, இந்தியா தனது சொந்த வான் பாதுகாப்பு கவசமான ‘சுதர்சன் சக்ரா’வை உருவாக்கி வருகிறது.advertisement7/9

டிஆர்டிஓ (DRDO) மூலம் உருவாக்கப்படும் இது செயற்கை நுண்ணறிவு (AI), செயற்கைக்கோள் மற்றும் ரேடார் உதவியுடன் மூன்று நிலைகளில் பாதுகாப்பை வழங்கும். 2035-ஆம் ஆண்டுக்குள் இது முழுமையாகத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.advertisement8/9

இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, 2026-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்காக 7.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 15% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.advertisement9/9

இதில் டிஆர்டிஓ (DRDO) ஆராய்ச்சிப் பணிகளுக்காக மட்டும் 29 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன ஆயுதங்களின் சேர்க்கை மற்றும் வலிமையான பாதுகாப்பு கவசம் இந்தியாவை உலக அரங்கில் ஒரு பெரும் சக்தியாக மாற்றியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version