மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

  • Published by:

Last Updated:Apr 28, 2026 4:02 PM IST

மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கோப்பு படம்

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில், 152 தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். முதற்கட்ட தேர்தலில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது.இந்நிலையில், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 1.64 கோடி ஆண்களும், 1.57 கோடி பெண்களும் அடங்குவர்.advertisementமொத்தம் 41,001 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணையவழி நேரடி ஒளிபரப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. திரிணமுல் காங்கிரஸின் தற்போதைய அமைச்சர்கள், சந்திரிமா பட்டாச்சார்யா, பிரத்யா பாசு, சுஜித் போஸ், அகில் கிரி, புலக் ராய் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களின் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.வட 24 பர்கானா மாவட்டத்தின் முக்கிய தொகுதியான பனிஹதியில், ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ரத்னா தேவ்நாத் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார்.. திரிணமுல் காங்கிரஸின் சட்டமன்றக் குழுத் தலைவர் நிர்மல் கோஷ், ரத்னா தேவ்நாத்தை எதிர்த்து களம் காண்கிறார்.advertisementஅரசியல் ரீதியாக மிக முக்கியமான நந்திகிராம் தொகுதியில், பா.ஜ.க-வின் சுவேந்து அதிகாரி மீண்டும் போட்டியிடுகிறார்… 2021 தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இம்முறை, பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடும் நிலையில் அங்கும் சுவேந்து அதிகாரி களம் காண்கிறார்.தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது போல், சுவேந்து அதிகாரியும் இரண்டு இடங்களில் களம் காண்கிறார்… நந்திகிராமில், பவித்ரா கர் என்பவரை திரிணமுல் காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் கிருஷ்ணாநகர், சாந்திபூர், கயாட்டா, மற்றும் டம் டம் ஆகிய தொகுதிகள் நட்சத்திரத் அந்தஸ்து பெற்றவை.advertisementமேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்ததும், தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்க ஆகிய மாநிலங்களுக்கான வாக்குப்பதிவுக்கு பிந்தய கருத்துக் கணிப்புகள் வெளியாக உள்ளன.Click here to add News18 as your preferred news source on Google. கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.Location :West BengalFirst Published :Apr 28, 2026 4:02 PM IST//மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version