வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர், காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் பாய்ந்ததில் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
