MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி: த.வெ.க. வழக்கறிஞர்கள் அதிருப்தி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி: த.வெ.க. வழக்கறிஞர்கள் அதிருப்தி

அரசியல்

அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி: த.வெ.க. வழக்கறிஞர்கள் அதிருப்தி

Admin
Last updated: மே 18, 2026 7:59 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக த.வெ.க. வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தி பரவலாக எழுந்துள்ளது. ஆளும் கூட்டணியின் ஆதரவாளர்களுக்கே இந்த பதவிகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற அமர்வை சேர்த்து, அரசு தலைமை வழக்கறிஞர், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர், அரசு சிறப்பு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், உரிமையியல் மற்றும் குற்றவியல் அரசு வழக்கறிஞர்கள் என மொத்தம் 180 அரசு வழக்கறிஞர் பதவிகள் உள்ளன. வழக்கமாக, ஆளும் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களே இந்தப் பதவிகளில் நியமிக்கப்படுவார்கள்.

தற்போது, தலைமை அரசு வழக்கறிஞராக விஜய் நாராயணன், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஜான் சத்யன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக பி.வி.பாலசுப்ரமணியம், டி.கவுதமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. இதில், விஜய் நாராயணன் அதிமுக ஆட்சியில் 2017 முதல் 2021 வரை தலைமை அரசு வழக்கறிஞராகவும், பாலசுப்ரமணியம் மற்றும் கவுதமன் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாகவும் பணியாற்றியுள்ளனர். அதிமுக ஆட்சியில் இருந்தவர்களையே த.வெ.க. ஆட்சியிலும் நியமித்தது த.வெ.க. வழக்கறிஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து த.வெ.க. வழக்கறிஞர்கள் கூறுகையில், 'கடந்த கரூர் மாநாட்டில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால் நடிகர் விஜய் விமர்சிக்கப்பட்டபோது, அவரை த.வெ.க. வழக்கறிஞர் அணிதான் பாதுகாத்தது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த 217 த.வெ.க.வினரும், திமுக ஆட்சியில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 5,328 த.வெ.க.வினரும் பின்னர் ஜாமீனில் வெளிவர த.வெ.க. வழக்கறிஞர் அணிதான் உதவியது. இவ்வாறு கட்சிக்கு உழைத்த வழக்கறிஞர்களுக்கு உரிய பதவிகள் வழங்காமல், அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு பதவி வழங்குவது சரியல்ல. எனவே, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் நடிகர் விஜய் தலையிட்டு, கட்சிக்கு உழைத்த வழக்கறிஞர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKTamil Nadu Politicsஅரசு வழக்கறிஞர்சட்டத்துறைத.வெ.க.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நேரு மைதானத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு!
Next Article அதிமுக வலுவிழக்க பழனிசாமிதான் காரணமா? – அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருப்பூரில் 140 கிலோ குட்கா கடத்தல்: த.வெ.க. நிர்வாகி கைது

திருப்பூர் பல்லடம் அருகே 140 கிலோ குட்கா கடத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உட்பட இருவர் கைது. காவல்துறையினரை கண்டதும் நிற்காமல் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில்…

1 Min Read
அரசியல்

பல்கலை. வேந்தர் விவகாரம்: அமைச்சர் நிலைப்பாட்டை மாற்றுக – வீரபாண்டியன்

பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில் உயர்கல்வி அமைச்சர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். மாநில உரிமையை ஒன்றிய…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நிதிநிலை தெரியாமல் வாக்குறுதி – தவெக அரசை தாக்கிய பொன்.ராதாகிருஷ்ணன்

திருநெல்வேலியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்தார். நிதிநிலை தெரியாமல் வாக்குறுதிகளை அள்ளிவீசியதாகவும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும்…

1 Min Read
அரசியல்

தமிழகத்தில் வெப்பநிலை உயர்வு: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் உள் பகுதிகளில் வரும் மே 30ஆம் தேதி வரை வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?