MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருவள்ளூர்: மின்கம்பத்தில் மோதி தந்தை, மகன் பலி – அதிர்ச்சி சம்பவம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருவள்ளூர்: மின்கம்பத்தில் மோதி தந்தை, மகன் பலி – அதிர்ச்சி சம்பவம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருவள்ளூர்: மின்கம்பத்தில் மோதி தந்தை, மகன் பலி – அதிர்ச்சி சம்பவம்!

தமிழ்நாடு

திருவள்ளூர்: மின்கம்பத்தில் மோதி தந்தை, மகன் பலி – அதிர்ச்சி சம்பவம்!

Admin
Last updated: மே 23, 2026 2:50 மணி
Admin
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சோகம்! உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூர் கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த கொத்தனார் சதீஷ் (34), அவரது மனைவி ரஞ்சனி (28), மகன்கள் சைலேஷ் (6) மற்றும் 9 மாத குழந்தை ஹரிஹரன், உறவுப்பெண் கீர்த்தனா (16) ஆகியோர் செங்குன்றம் அருகே அலமாதியில் நடந்த உறவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, நள்ளிரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சோழவரம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சதீஷ் மற்றும் அவரது மூத்த மகன் சைலேஷ் ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சதீஷின் மனைவி ரஞ்சனி, குழந்தைகளான ஹரிஹரன் மற்றும் கீர்த்தனா ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த தந்தை-மகனின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த துயரச் சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தில் இருவர் பலியான இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai Traffic PoliceRoad AccidentTamil Newsதிருவள்ளூர்மீஞ்சூர்விபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக கூட்டணியை காக்க எனக்கு வலிமை இல்லை – திருமாவளவன்
Next Article திருப்பதி: வரலாறு காணாத கூட்டம்! 5 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி பற்றிய செய்தி
தமிழ்நாடு

மகள் இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மகள் இறந்த துயரத்தைத் தாங்க முடியாமல், மனமுடைந்த தொழிலாளி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தமிழக முதல்-அமைச்சராக இன்று விஜய் பதவியேற்கிறார்: சென்னையில் 20 இடங்களில் விழா நேரலை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியானது. அதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று…

4 Min Read
ஆன்மிகம்

சத்குருவின் தியான செயலி சாட்ஜிபிடியில்: 90 கோடி பேருக்கு இனி மனநல உதவி!

சத்குருவின் 'மிராக்கிள் ஆஃப் மைண்ட்' தியான செயலி, சாட்ஜிபிடி தளத்தில் அறிமுகம்! 90 கோடி பயனர்களுக்கு இனி மனநல உதவிகள் எளிதில் கிடைக்கும்.

2 Min Read
தமிழ்நாடு

திருச்சி-சார்லபள்ளி சிறப்பு ரயில் வாராந்திர எக்ஸ்பிரஸாக மாற்றம்

திருச்சி-சார்லபள்ளி சிறப்பு ரயில் இனி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படும். தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?