MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: பரபரப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: பரபரப்பு

தமிழ்நாடு

தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: பரபரப்பு

Admin
Last updated: மே 25, 2026 7:37 காலை
Admin
Share
SHARE

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில், வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கச்சார்குளத்தெரு, கும்பகோணம்-காரைக்கால் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தவமணி (75) என்பவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டிற்கு முகத்தை மூடியபடி வந்த பெண் ஒருவர், வீடு வாடகைக்கு வேண்டும் என்று கூறி தவமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

திடீரென அந்த பெண், தவமணியின் கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இந்த முயற்சியில் சங்கிலியில் இருந்த டாலர் தவமணியின் கையில் சிக்கிய நிலையில், மீதமிருந்த 4 பவுன் தங்க சங்கிலியை அந்த பெண் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அவரை தவமணி துரத்திச் சென்றபோது, அந்த பெண் மிளகாய் பொடியை தூவிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து தகவலறிந்த திருநீலக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம பெண் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மெயின் ரோடு பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் பெண் ஒருவர் துணிகரமாக தங்க சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:crimeகும்பகோணம்தஞ்சைதிருநாகேஸ்வரம்நகை பறிப்புமூதாட்டி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: 2 வாரங்களில் 4வது முறை
Next Article இதய ஆரோக்கியத்திற்கு வெள்ளரி: தினமும் சாப்பிட்டால் நன்மைகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்

இடஒதுக்கீடு சமூக நீதிக்கான அரசமைப்புச் சார்ந்த கருவி: சிராக் பாஸ்வான்

சமூக நீதிக்கான அரசமைப்புச் சார்ந்த கருவியாக இடஒதுக்கீடு தொடரும் என மத்திய அமைச்சர்…

ஆகஸ்ட் 23, 2026

ஆட்டோவை ரெயிலில் ஏற்றி சொந்த ஊர் சென்றதாக பரவும் வீடியோ: ரயில்வே விளக்கம்

சொந்த ஊருக்குச் செல்ல ஆட்டோவை ரெயிலில் ஏற்றிச்…

ஆகஸ்ட் 23, 2026

போக்சோ வழக்கு தீர்ப்பு எதிரொலி: தற்கொலை செய்துகொண்ட முதியவர்

போக்சோ வழக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இடுக்கி…

ஆகஸ்ட் 23, 2026

கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேடு: ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமறைவு

கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு கட்டுப்பாட்டு…

ஆகஸ்ட் 23, 2026

பிரதமர் குறித்து அவதூறு: சினிமா ஒப்பனை கலைஞர் உள்பட 3 பேர் கைது

பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் குறித்து…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

டெல்லி உயர் நீதிமன்ற கட்டிடம்
தமிழ்நாடு

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு தீவிரம்

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா நெருங்கும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

2 Min Read
மாணிக்கம் தாகூர் வேளாண் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கிறார்
தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்: நவீன வேளாண்மைக்கு வலுவான அடித்தளம் – மாணிக்கம் தாகூர்

நவீன வேளாண்மைக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாக மாணிக்கம் தாகூர் பாராட்டியுள்ளார். இருப்பினும், நீர் மேலாண்மை மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களில் கூடுதல் கவனம் தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
பீகார், திரிபுரா, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் பத்மஸ்ரீ டாக்டர். டி.ஒய். பாட்டீல்
தமிழ்நாடு

பீகார், திரிபுரா முன்னாள் ஆளுநர் டி.ஒய். பாட்டீல் காலமானார்

பீகார், திரிபுரா, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் பத்மஸ்ரீ டாக்டர். டி.ஒய். பாட்டீல் (90) வயது முதிர்வு காரணமாக காலமானார். கல்வி மற்றும் பொதுச் சேவையில் அவரது…

2 Min Read
கோவை: நகை திருட்டு புகார் தொடர்பாக காவல் நிலையத்தில் தொழிலதிபர் சண்முக பாண்டியன்
தமிழ்நாடு

1000 சவரன் நகை திருட்டு: மாமனார் புகாரில் மருமகன் மீது வழக்கு

கோவையில், தொழிலதிபர் சண்முக பாண்டியன் தனது மாமனார் வீட்டில் இருந்த 900 சவரன் நகைகளை திருடியதாக மருத்துவரான மருமகன் விக்னேஷ் மீது புகார் அளித்துள்ளார். இதன் பேரில்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?