MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மனைவியை துன்புறுத்திய இளைஞர் கொடூரக் கொலை: இருவர் கைது, மேலும் இருவருக்கு வலைவீச்சு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மனைவியை துன்புறுத்திய இளைஞர் கொடூரக் கொலை: இருவர் கைது, மேலும் இருவருக்கு வலைவீச்சு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மனைவியை துன்புறுத்திய இளைஞர் கொடூரக் கொலை: இருவர் கைது, மேலும் இருவருக்கு வலைவீச்சு

தமிழ்நாடு

மனைவியை துன்புறுத்திய இளைஞர் கொடூரக் கொலை: இருவர் கைது, மேலும் இருவருக்கு வலைவீச்சு

Admin
Last updated: மே 12, 2026 9:29 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடி, சக்தி விநாயகர்புரம் 4வது தெருவைச் சேர்ந்த பூலப்பனின் மகன் அந்தோணி சேசுராஜ் (27) என்பவர், தாளமுத்துநகர் ஆ.சண்முகபுரத்தைச் சேர்ந்த காசிராஜனின் மகளை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. அந்தோணி சேசுராஜ் மதுபோதையில் தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவரது மனைவி, ஒரு மாதத்திற்கு முன்பு கோபித்துக்கொண்டு தனது தந்தை வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

சகோதரியை தொடர்ந்து துன்புறுத்தி வந்த அந்தோணி சேசுராஜ் மீது ஆத்திரமடைந்த அவரது மைத்துனர் அருண்குமார் (27), தனது நண்பர்களான சுதாகர், செல்வகுமார் மற்றும் மற்றொருவருடன் சேர்ந்து அந்தோணி சேசுராஜைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

நேற்று இரவு, தூத்துக்குடி ஸ்டெம்பார்க் பின்புறம் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு அந்தோணி சேசுராஜை 'மது அருந்த வருமாறு' அவர்கள் ஏமாற்றி அழைத்துள்ளனர். அங்கு அனைவரும் மது அருந்தியபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்தோணி சேசுராஜை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்தக் கொலை தொடர்பாக அருண்குமார் மற்றும் அவரது நண்பரான ஆனந்தராஜின் மகன் சுதாகர் (29) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரிக்கி ரத்தன் பண்டிட் நியமனம்: குதிரையுடன் ஒப்பிட்ட காங்கிரஸ் – இன்சிடாடஸ் கதை என்ன?
Next Article ‘நாட்டின் பொருளாதார நிலையை பிரதமர் மக்களுக்கு விளக்க வேண்டும்’ – அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை

திருப்பதி உண்டியலில் ரூ.4.46 கோடி குவிந்த காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 71,393 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.…

ஆகஸ்ட் 2, 2026

விவசாயிகளின் நலனே முக்கியம் – டி.கே.சிவகுமார்

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை கர்நாடகத்தின் முக்கியப்…

ஆகஸ்ட் 2, 2026

சபரிமலைக்கு செல்ல வேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள்

பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு பக்தர்கள் செல்வதில்…

ஆகஸ்ட் 2, 2026

கேரளாவில் கனமழை: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

கேரளாவில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர்,…

ஆகஸ்ட் 2, 2026

காவிரி நீர் பங்கீடு: கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடக்கம்

காவிரி நீர் பங்கீடு தொடர்பான முக்கிய விவகாரத்தில்,…

ஆகஸ்ட் 2, 2026

You Might Also Like

லண்டன் வானில் பறக்கும் ராட்சச டிராகன் மாதிரி
தமிழ்நாடு

லண்டனில் நிஜ டிராகன்: மக்கள் அதிர்ச்சி – பின்னணி என்ன?

லண்டன் வானில் நிஜ டிராகன் பறந்ததாகக் கூறி பொதுமக்கள் அதிர்ச்சி. 'ஹவுஸ் ஆஃப் தி டிராகன்' தொடரின் விளம்பர உத்தி எனத் தெரியவந்ததும் நிம்மதி.

2 Min Read
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி மற்றும் கட்டுமான கற்கள் கொண்டு செல்வதற்கு தடை
தமிழ்நாடு

தமிழகத்தில் இருந்து ஜல்லி, கற்கள் கொண்டு செல்ல தடை

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி மற்றும் கட்டுமான கற்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரிப்பதே…

2 Min Read
தமிழ்நாடு

கும்பக்கரை அருவிக்கு தடை: வனத்துறை அதிரடி அறிவிப்பு!

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

தி.நகரில் பட்டப்பகலில் 1 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளை!

சென்னையின் தி.நகரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 1 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையனின் மனைவியை கைது செய்த போலீசார், 100 பவுன் நகைகளை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?