MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கோவையில் சிறுமி கொடூர கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கோவையில் சிறுமி கொடூர கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!
தமிழ்நாடு

கோவையில் சிறுமி கொடூர கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!

Admin
Last updated: May 23, 2026 5:08 pm
Admin
Share
SHARE

கோவையில் 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சூலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டது மனிதநேயமற்ற செயல் என எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு தாங்கள் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் பதிவு செய்வதாக அவர் கூறியுள்ளார்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில் ஏற்படும் தாமதம், சட்ட சலுகைகள் போன்றவை குற்றவாளிகளுக்கு தைரியத்தை அளித்து, இது போன்ற கொடூரங்கள் தொடர்கதையாக காரணமாகின்றன. வெறும் சட்ட புத்தகங்களால் குற்றங்களை தடுத்துவிட முடியாது. சமரசமற்ற கடுமையான நடவடிக்கைகள், காலதாமதமற்ற விரைவான புலனாய்வு, உறுதியான அதிரடித் தண்டனை ஆகியவை மட்டுமே இது போன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்டை வீட்டாரே இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருப்பது, நம் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழலை உணர்த்துவதாகவும், தமிழகம் பெண்களுக்கும், பிஞ்சு பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவருவது மிகுந்த அச்சத்தையும் வேதனையையும் அளிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனவே, தமிழக அரசும், காவல்துறையும், நீதித்துறையும் இணைந்து இந்த விஷயத்தில் உடனடியாகவும் உறுதியாகவும் தலையிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரித்து, எவ்வித சலுகையும் இன்றி, மற்றவர்களுக்கு பாடமாய் அமையும் வகையில் மிக கடுமையான தண்டனை விரைவாக பெற்றுத்தரப்பட வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். வெற்று வார்த்தைகளால் ஆறுதல் கூறுவதை நிறுத்திவிட்டு, இனி ஒரு பெண் குழந்தைக்குக்கூட இத்தகைய கொடூரம் நிகழ கூடாது என்கிற அடிப்படையில் தமிழக அரசும், நீதித்துறையும் போர்க்கால அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும் என்றும் முகம்மது முபாரக் உறுதியளித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:coimbatoreTamil Nadu Newsஎஸ்டிபிஐ கட்சிசிறுமி கொலைசிறுமி பாதுகாப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவை சிறுமி கொலை: விரைந்து தீர்ப்பளிக்க ராமதாஸ் கோரிக்கை
Next Article தரவுகள்தான் இன்றைய உலகின் சொத்து: மாபெரும் திருட்டு திரைப்படம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னையை குளிர்வித்த கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி

தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 14-ந்தேதி வரை லேசானது முதல்…

1 Min Read
தமிழ்நாடு

திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்ச்சி – சீமான்

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின்…

1 Min Read
தமிழ்நாடு

வாடமங்கலம் ஏரி: துர்நாற்றம் வீசும் மீன்களால் மக்கள் அவதி!

கிருஷ்ணகிரி மாவட்டம் வாடமங்கலம் ஏரியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

பிரேமலதா விஜயகாந்த்: அன்புத் தம்பி முதல்வர் விஜய்க்கு வாழ்த்து!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் அமர்வு இன்று நடைபெற்றது. சட்டப்பேரவையின் சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் பொறுப்பேற்றார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாகப் பொறுப்பேற்ற சபாநாயகருக்கு சட்டமன்ற…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?