MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: “தவெகவை ஆதரிக்க திருமாவளவன் தயங்குவது பேரம் பேசுவதாலா?” – தமிழிசை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - “தவெகவை ஆதரிக்க திருமாவளவன் தயங்குவது பேரம் பேசுவதாலா?” – தமிழிசை

லைஃப் ஸ்டைல்

“தவெகவை ஆதரிக்க திருமாவளவன் தயங்குவது பேரம் பேசுவதாலா?” – தமிழிசை

Admin
Last updated: மே 9, 2026 3:56 மணி
Admin
Share
SHARE

சென்னை: கம்யூனிஸ்டுகளுடன் ஒட்டுமொத்தமாக முடிவை தெரிவிப்பதாக கூறிவிட்டு திருமாவளவன் தற்போது ஏன் தயங்குகிறார்? என்ன பேரம் பேசிக் கொண்டிருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “தொடர்ந்து மூன்று முறை முழுமையான எண்ணிக்கை இல்லாத காரணத்தினால், விஜய் ஆளுநரை சந்தித்த பிறகும் ஆளுநர் அவரை திருப்பி அனுப்பியிருக்கிறார். நீங்கள் ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கையோடு வாருங்கள், நாங்கள் அனுமதி தருகிறோம் என ஆளுநர் மாளிகை தெளிவாகச் சொல்கிறது. எண்ணிக்கை இல்லாமல் சென்றுவிட்டு, ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.

இத்தனை மதிப்பெண்கள் வாங்கினால் தான் தேர்வாக முடியும் என்ற தேர்வு இருக்கும்போது, அந்த எண்ணிக்கை இல்லாமலேயே என்னை தேர்வு செய்யுங்கள் எனச் சொல்வது தவறு; அது மக்களின் நம்பிக்கையை பெற்றதாக ஆகாது.

தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் சொல்லிவிட்டு, அதற்கு பின்னால் இருந்து பல முட்டுக்கட்டைகளை போடுகிறார். ஆக, வெளித்தோற்றத்தில் விஜய்யை ஆதரிப்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, எல்லாரும் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

கம்யூனிஸ்டுகள் ஆதரவை தெரிவித்துவிட்டு, மத்தியில் இருந்து பாஜக ஆளுநருக்கு அழுத்தம் தருகிறது என சொல்கிறார்கள்; அதிலும் உண்மை இல்லை. திருமாவளவனின் ஆதரவுக்காக காத்திருக்கிறோம் என சொல்கிறார்கள். கம்யூனிஸ்டுகளுடன் ஒட்டுமொத்தமாக முடிவை தெரிவிப்பதாக கூறிவிட்டு திருமாவளவன் தற்போது ஏன் தயங்குகிறார்? என்ன பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக திமுகவிடமிருந்து தனது நட்பை முறித்துக் கொண்டது. இவர்களெல்லாம் அரசியல் சுயலாபத்துக்காக முடிவுகளை எடுத்துவிட்டு ஆளுநர் மீதும், பாஜக மீதும் பழி சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இதனிடையே, தனது மற்றொரு எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதில் அத்தனை பேருக்கும் அக்கறை இருக்கிறது. அந்த ஆட்சி நிலையானதாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் அக்கறை இருக்கிறது. அதற்கான அடிப்படை நடவடிக்கைகள் தமிழக அரசியலில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.

மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது அதனால் தான் பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. ஆனால் ஆக்கபூர்வமாகவும் உண்மை பூர்வமாகவும் எதிர்கொள்ள வேண்டிய இன்றைய அரசியல் சூழலை…உணர்ச்சிபூர்வமாக மாற்றி பல தொண்டர்கள் நடந்து கொள்வது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி வாசலில் சகோதரர் ஒருவர் பிளேடால் வெட்டிக் கொள்வதும் வள்ளியூரில் ஒருவர் தீக்குளிக்க முயன்று அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது.

உடனடியாக தனது ஆதரவாளர்களுக்கு விஜய் ஒரு செய்தியை வெளியிட வேண்டும் தங்களுக்கு வாக்களித்த மக்களும் ஆதரவாளர்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் எந்த ஒரு ஆபத்தான முடிவுக்கு வரக்கூடாது என்பதையும் அன்பான வேண்டுகோளாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “இந்தியா கூட்டணியில் பிளவு”- சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா
Next Article அர்ஜுன் தாஸ் நடித்த “கான் சிட்டி” படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

முக்தார், திருச்சி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர், பா.ஜ., நிர்வாகி அலிசா அப்துல்லா குறித்து அவதுாறான வீடியோ வெளியிட்டதாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆதவ் அர்ஜூனாவுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்பில்லை: தவெக ஐடி விங்

அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கும் போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய நபருக்கும் தொடர்பில்லை என்றும், தைரியமிருந்தால் திமுக ஐடி விங் சட்டரீதியாக நிரூபிக்கட்டும் என்றும் தவெக ஐடி விங் சவால்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ரோஹித் சர்மாவிடம் கேப்டன்சி பாடம்: திலக் வர்மா விளக்கம்

இளம் வீரர் திலக் வர்மா, கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேப்டன்சி குறித்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இருவரும் பேட்டிங்கை விட கேப்டன்சி பற்றி அதிகம் பேசுவதாக…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

எடப்பாடிக்கு அடிமை இல்லை: சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி

என் வீட்டில் சாக்கடை ஊற்றும் போது எடப்பாடி பழனிசாமி குரல் கொடுத்தார் என்பதற்காக காலம் முழுவதும் அவருக்கு அடிமையாக இருக்க முடியாது என்று யூடியூபர் சவுக்கு சங்கர்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?