வேலுார் மாவட்டம், சத்துவாச்சேரி பகுதியைச் சேர்ந்த முக்தார் அகமது, 48, மற்றும் சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி அலிசா அப்துல்லா குறித்து அவதுாறாகவும், அவரது இரட்டை குழந்தைகளை இழிவுப்படுத்தியும் 'வீடியோ' வெளியிட்டதாக புகார் எழுந்தது. 'மை இந்தியா' என்ற 'யூ டியூப்' சேனலை நடத்தி வரும் முக்தார், திருச்சி சூர்யாவுடன் இணைந்து இந்த வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அலிசா அப்துல்லா அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதலில் திருச்சி சூர்யா, 33, மற்றும் முக்தார் அகமது, 48, ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது அவதுாறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
தொடர்ந்து, இந்த இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், அவர்கள் மீது பாய்ந்துள்ளது குண்டர் சட்டம்.
சமூக வலைதளங்களில் அவதுாறான கருத்துக்களை பரப்பியதாக எழுந்த புகாரில், யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.