சென்னையின் மெரினா கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி மாயமான மாணவனை மீட்டுத் தருமாறு மாணவனின் தாய் முதலமைச்சர் விஜய்க்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆவடியை அடுத்த கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சுதர்சன் (16). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சுதர்சன் தனது குடும்பத்தினருடன் மெரினா கடற்கரைக்குச் சென்றார். அங்கு கண்ணகி சிலை அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ராட்சத அலை அவரது தம்பி கமலேஷை இழுத்துச் சென்றுள்ளது. இதைக் கண்ட சுதர்சன், தம்பியைக் காப்பாற்ற முயன்றபோது, அவரும் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
தம்பி கமலேஷ் கரைக்கு வந்துவிட்ட நிலையில், சுதர்சன் ராட்சத அலையில் சிக்கி மாயமானார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கூச்சலிட்டுள்ளனர். மாணவனைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெரினா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காணாமல் போன மாணவனின் தாய் கண்ணீர் மல்க, 'என்னை ஓட்டுப்போடச் சொல்லி வற்புறுத்திய என் மகன் இப்போது இல்லை. முதல்வர் விஜய் அவர்கள் என் மகனைக் காப்பாற்ற வேண்டும்' என்று உருக்கமாக முதலமைச்சர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.