MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுகவில் சுயநலப் பூகம்பம்: கட்சி பிளவுபடுமா? பெரும் குழப்பம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுகவில் சுயநலப் பூகம்பம்: கட்சி பிளவுபடுமா? பெரும் குழப்பம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - அதிமுகவில் சுயநலப் பூகம்பம்: கட்சி பிளவுபடுமா? பெரும் குழப்பம்!

அரசியல்

அதிமுகவில் சுயநலப் பூகம்பம்: கட்சி பிளவுபடுமா? பெரும் குழப்பம்!

Admin
Last updated: மே 17, 2026 7:00 காலை
Admin
Share
SHARE

பொன்விழா கண்ட அதிமுக, தற்போது ஒரு சிலரின் சுயநலத்தால் மீண்டும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துள்ளது. கட்சியின் ஒட்டுமொத்த நலனை விட தனிப்பட்ட லாபங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதே இதற்குக் காரணம்.

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, திமுகவில் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களால் மதுரையில் தாமரைக் கொடியை ஏற்றி அடிக்கல் நாட்டப்பட்டது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, 1972 அக்டோபரில் அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கினார். அப்போது எம்.ஜி.ஆர் ரசிகர்களை 'விசிலடிச்சான் குஞ்சுகள்' என திமுக விமர்சித்தது. திமுக மேடைகளுக்குப் போட்டியாக அதிமுக மேடைகள் போட்டு பதிலடி கொடுத்தனர். 'ரத்தத்தின் ரத்தமே' என எம்.ஜி.ஆர் அழைத்தபோது, தங்களையே கட்சிக்கு ரத்தம் கொடுத்ததாக உணர்ந்தனர் ரசிகர்கள். இதனால் பல நெருக்கடிகளைச் சந்தித்தனர். ஜெயிலில் இருந்த ரவுடிகளை பரோலில் எடுத்து பழிதீர்த்த சம்பவங்களும் நடந்தன. இதனால் திமுகவும் அதிமுகவும் நிரந்தர எதிரிகளாயின.

ஜெயலலிதா அதிமுக தலைமையை ஏற்ற பிறகு, திமுகவினருடன் தொடர்பு வைத்திருந்தவர்களைக் கட்சியிலிருந்து நீக்கினார். மதுரை திருமண நிகழ்ச்சி ஒன்றில் மு.க. அழகிரியும் செல்லூர் ராஜூவும் கலந்துகொண்ட புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்டு, ராஜூவை அமைச்சர் பதவியிலிருந்தே ஜெயலலிதா நீக்கியது இதற்கு ஒரு உதாரணம். இந்தச் சூழலில், இந்தத் தேர்தலில் திமுக தயவில் ஆட்சியைப் பிடிக்க முயன்றதாகக் கூறி, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான முன்னாள் அமைச்சர்கள் பழனிசாமிக்கு எதிராகப் பிரிவினையைத் தொடங்கிவிட்டனர்.

கட்சிக்குள் இருந்த பிளவைச் சரிசெய்து, அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை பழனிசாமி புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் பாதகமாக அமைந்தால், இது அவருக்கு எதிராகத் திரும்பும் என்றும், அதிமுக மேலும் பிளவுபடும் என்றும் அப்போதே பேச்சுக்கள் எழுந்தன. 2021 தேர்தலில் தோற்றாலும், அதிமுகவை வலுவான எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திய பழனிசாமி, கடந்த 5 ஆண்டுகளாகக் கட்சியை சீராக வழிநடத்தினார். பாஜகவின் உள்வேலைகளால் கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதற்காக, டெல்லிக்குச் சென்றார், வலிமையான கூட்டணியை அமைத்தார், தமிழகம் முழுவதும் தனி ஒருவராகப் பிரச்சாரம் செய்தார். இதன் காரணமாகவே, விஜய்யின் அலைக்கும் மத்தியில் அதிமுகவுக்கு கவுரமான தோல்வி கிடைத்தது.

ஆட்சியைப் பிடித்துவிட்டால் எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம் என்று பழனிசாமி கணக்கு போட்டார். முதலில் அமைதியாக இருந்த முன்னாள் அமைச்சர்கள், பழனிசாமியின் முயற்சி பலனளிக்காது என்று தெரிந்ததும், தமாகா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். பழனிசாமி திமுகவுடன் சேர நினைத்தபோது, நாம் தமாகாவுக்கு ஆதரவளித்து அதிகாரத்தில் பங்கேற்பதில் என்ன தவறு என்று சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி போன்றோரும் சுயநலமாக யோசித்தனர். 'அம்மாவால் தீய சக்தி என்று சொல்லப்பட்ட திமுகவுடன் பழனிசாமி இணைய முயன்றார். அதை ஏற்க முடியாமல் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்' என்று அவர்கள் கூறுகின்றனர். புதுச்சேரியில் நான்கு நாட்கள் தங்கியிருந்து 'சிந்தித்து' இந்தப் 'தெளிவைப்' பெற்றதாகக் கூறப்படுகிறது.

தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் தொண்டர்களுக்கு ஆறுதல் சொல்ல யாருக்கும் நேரமில்லை. ஆளாளுக்கு சுயநலமாகச் சிந்தித்து கட்சியை இரண்டாகப் பிரித்துவிட்டு, 'அதிமுகவை உடைப்பது எங்கள் நோக்கமல்ல' என்று கூறி, 'பொதுக்குழுவைக் கூட்டுங்கள்' எனப் போர்க்குரல் எழுப்புகின்றனர். இதற்குப் பதிலடியாக, 'கட்சி மாறி வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்' என சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், அதிமுக மீண்டும் நீதிமன்றப் படியைப் பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKTamil Nadu Politicsஅதிமுகஅதிமுக பிளவுஅரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வேலையில்லா இளைஞர்கள் குறித்து தலைமை நீதிபதி விளக்கம்: என்ன சொன்னார்?
Next Article ஐபிஎல் 2026: பந்து தாக்கி பாதியிலேயே வெளியேறிய சாய் சுதர்சன்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75 நிமிடங்கள் உரையாற்றினார். இது கடந்த…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

திமுகவில் டி.ஆர். பாலு ஓரங்கட்டப்படுகிறாரா? ஆ.ராசா பொதுச்செயலாளர் ஆவாரா?

திமுகவில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளில் மாற்றங்கள் வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டி.ஆர்.பாலுவுக்கு பதிலாக ஆ.ராசா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

1 Min Read
அரசியல்

தவெகவில் இணைந்தனர் ஆர்.வி. உதயகுமார், மன்சூர் அலிகான்!

இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் இன்று அமைச்சர் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி. உதயகுமார், தவெகவில் தன்னை…

1 Min Read
அரசியல்

சிங்கப்பூர் தமிழர் தேர்தல் முறைகேடு: விமான நிலையத்தில் கைது!

சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற பெண் ஒருவர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு அவகாசம் தேவை: துரை வைகோ வலியுறுத்தல்

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, புதிய முதல்வர் விஜய்க்கு குறைந்தது 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?