MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருமாவளவன் தடம்மாறுகிறார்: விசிகவில் இருந்து விலகும் பனையூர் பாபு குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - திருமாவளவன் தடம்மாறுகிறார்: விசிகவில் இருந்து விலகும் பனையூர் பாபு குற்றச்சாட்டு

அரசியல்

திருமாவளவன் தடம்மாறுகிறார்: விசிகவில் இருந்து விலகும் பனையூர் பாபு குற்றச்சாட்டு

Admin
Last updated: மே 24, 2026 8:56 மணி
Admin
Share
SHARE

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளரும், செய்யூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பனையூர் பாபு, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் திருமாவளவனின் பங்கு அளப்பரியது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களை திரட்டி அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர் என்றும் புகழாரம் சூட்டிய பனையூர் பாபு, தற்போது அவரது அரசியல் நிலைப்பாடுகள் தடம் மாறுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தனது ராஜினாமா அறிக்கையில், பனையூர் பாபு, திருமாவளவன் தனது அடிப்படை அரசியல் அறத்திலிருந்து தடம் மாறுவதாகவும், சமீப காலங்களாக அவரது செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் வியப்பையும் வேதனையையும் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு தெளிவான நிலைப்பாடின்றி, அடிக்கடி தடுமாறுவதாகவும், நேற்று ஒரு நிலைப்பாடு, இன்று தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு நிலைப்பாடு, நாளை செய்தியாளர் சந்திப்பில் வேறொரு நிலைப்பாடு, இரவில் சமூக வலைத்தள நேரலையில் முற்றிலும் முரணான நிலைப்பாடு என முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், நேற்று வரை ஒரு நடிகரை 'ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி பெற்றெடுத்த பிள்ளை' என்று கடுமையாக விமர்சித்த திருமாவளவன், இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது, அவர் இதுகாலம் வரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கைகளிலும், கருத்தியலிலும் தடம்மாறத் தயாராகிவிட்டார் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது என்றும் பனையூர் பாபு தெரிவித்துள்ளார். 'விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்திற்குத்தான் செல்ல வேண்டும், சட்டமன்றத்திற்கு வரக் கூடாது' என்று சூளுரைத்தவர், இன்று அவர்களுடனே கைகோக்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் பயணிக்க இயலாது என தனது மனசாட்சி உணர்த்துவதாகவும், எனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுவதாக கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்வதாகவும் பனையூர் பாபு கூறியுள்ளார். இருப்பினும், தான் கட்சியிலிருந்து விலகினாலும், திருமாவளவனிடம் இருந்து கற்றுக்கொண்ட கொள்கைகளிலும், கருத்தியலிலும் இம்மியளவும் பின்வாங்காமல், அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோர் காட்டிய வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான தனது பயணம் தொடரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu PoliticsVCKஅரசியல்திருமாவளவன்பனையூர் பாபுவிசிக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மிஸ்டர் எக்ஸ் பாடம்: இயக்குநர் மனு ஆனந்த் உருக்கமான அறிக்கை
Next Article பும்ராவிடம் மன்னிப்பு கேட்ட ராம் சரண்: காரணம் என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

அரசியல்

தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து கனிமொழி எம்.பி கேள்வி

மதுரையில் சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து திமுக எம்.பி கனிமொழி கடும் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்…

1 Min Read
தமிழ்நாடு

தவெக எம்எல்ஏவிடம் பேரம்: மேலும் 4 பேர் கைது

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு அவகாசம் தேவை: துரை வைகோ வலியுறுத்தல்

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, புதிய முதல்வர் விஜய்க்கு குறைந்தது 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என…

1 Min Read
அரசியல்

அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி: த.வெ.க. வழக்கறிஞர்கள் அதிருப்தி

தமிழகத்தில் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக கூறி த.வெ.க. வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?