நடிகர் ராம் சரண், கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவிடம் பொதுவெளியில் ஏற்பட்ட ஒரு குழப்பத்திற்காக மன்னிப்புக் கோரியுள்ளார். ‘பெத்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா போபாலில் நடைபெற்றது. இந்த விழாவில், ராம் சரணிடம் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு அவர் சுருக்கமாக பதிலளித்தார்.
அடுத்ததாக, இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, ராம் சரண் அவரை ஒரு கால்பந்து வீரர் என்று தவறாகக் குறிப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரால் கிண்டலுக்கு உள்ளானது.
இந்தச் சம்பவம் குறித்து தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் ராம் சரண் விளக்கம் அளித்துள்ளார். அதில், 'சில சமயங்களில் பெயர்களை நினைவில் கொள்வதில் நான் மிகவும் மறதிக்காரன். இந்த குழப்பத்திற்காக பும்ராவிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறேன். அந்த உற்சாகமான சூழலில் ஏற்பட்ட ஒரு சாதாரண மனிதத் தவறு இது. உங்கள் ஆட்டத்தை நான் மிகவும் மதிக்கிறேன். ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் திணறடித்து, இந்தியாவையே பெருமைப்படுத்தும் உங்கள் திறமைக்கு நான் ரசிகன்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், 'இயல்பாக சிரித்ததை தவறாக சித்தரிப்பது வருத்தமளிக்கிறது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.