MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுகவில் இருந்து கண்ணீருடன் விலகுகிறேன் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > அதிமுகவில் இருந்து கண்ணீருடன் விலகுகிறேன் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து கண்ணீருடன் விலகுகிறேன் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Admin
Last updated: July 1, 2026 6:48 am
Admin
Share
SHARE

அதிமுகவில் இருந்து கண்ணீருடனும் மிகுந்த மனவேதனையுடனும் விடைபெறுவதாக எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதவிக்காகவோ சுயநலத்திற்காகவோ கட்சியில் இணையவில்லை என்றும், இரத்தம் சதையாக இயக்கத்தை நேசித்து வாழ்ந்தவன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சந்தித்த நெருக்கடி காலங்களில், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி கே.பழனிசாமியின் பின்னால் உறுதியாக நின்றதாக விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியின் அடக்குமுறையால் தன் மீது 43 பொய் வழக்குகள் சுமத்தப்பட்டதாகவும், தன் குடும்பத்தினர் மீதும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பாய்ந்து குடும்பத்தின் நிம்மதி குலைக்கப்பட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜியின் அதிகார மமதையை வீழ்த்தி, கரூர் தொகுதியில் அதிமுக கொடியை மீண்டும் ஏற்றியதில் தனக்கும் உடன்பிறப்புகளுக்கும் பங்குண்டு என அவர் நினைவு கூர்ந்தார். ஆனால், ஜெயலலிதாவால் தீய சக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட திமுகவுடன் அண்ணா திமுக கைகோர்ப்பதைக் கண்டு மனம் ரத்தக் கண்ணீர் வடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த சமரச முடிவுக்குத்தான் நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர, அவருடைய தலைமைக்கு எதிராக நிற்கவில்லை. ஆனால், தொண்டர்களின் உணர்வுகளை துச்சமாக மதித்து அவர் எடுத்த தன்னிச்சையான முடிவுதான் இயக்கத்தை அழிவிலும் வேதனையிலும் நிறுத்தியுள்ளது. இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாகத் தயாராக இல்லை என்றும், அதிமுகவுக்காக வாழ்நாளின் பெரும் பகுதியைக் கொடுத்துவிட்டதாகவும், இனி கரூர் தொகுதி மக்களின் சேவகனாக மக்கள் பயணம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKTamil Nadu Politicsஅதிமுகஎம்.ஆர்.விஜயபாஸ்கர்தமிழக அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முருங்கை: மலச்சிக்கல் முதல் மூட்டு வலி வரை தீர்க்கும் அற்புதக் காய்!
Next Article தவெக அமைச்சர் விஸ்வநாதன் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மகனைக் கண்டுகொலை: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியைக் கைது செய்தது போலீஸ்

சென்னையில், மகன் கண் முன்னே கணவரை மனைவியே குத்திக் கொலை செய்த சம்பவம்…

July 1, 2026

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

த.வெ.க. அரசுக்கு காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதலமைச்சர் விஜய்யின் த.வெ.க. அரசுக்கு காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவை இன்று அறிவித்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு…

1 Min Read
தமிழ்நாடு

தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 91,369 வழக்குகளுக்கு தீர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.664 கோடி வழங்கல்

தமிழகத்தில் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத் மூலம் 91,369 வழக்குகள் தீர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.664 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற நடைமுறைகளை எளிதாக்கியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: முதல்வர் விஜய்க்கு சீமான் கண்டனம்

தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட் நாராயணனை முதல்வர் விஜய் நியமித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், இது தமிழர்களை இழிவுபடுத்தும் செயல் என்றும் நாம் தமிழர் கட்சி…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முதல்வர் விஜய்க்கு ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து

தமிழக முதல்வர் விஜய்க்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?