சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் தமிழக முதல்வர் விஜய். மக்கள் அளித்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம் என அவர் உறுதியளித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று மக்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மக்களின் பேராதரவுடன் அமைக்கப்பட்ட நமது அரசுக்கு, பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்து வாக்களித்தனர். இதன் மூலம், இந்த நம்பிக்கைத் தீர்மானம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் விஜய் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்து த.வெ.க.வுடன் நிற்கும் தமது கழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தனது அன்பையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார். தேர்தலில் தங்களை நம்பி வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்வது தனது கடமை என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படும் பொறுப்பு தங்களுக்கு மேலும் அதிகரித்துள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் அயராது பாடுபடுவோம் என அவர் உறுதியளித்துள்ளார். இந்த நம்பிக்கை வெற்றி, தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஒரு சிறந்த அறிகுறி என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.