MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கொடைக்கானல்: புலிகள் நடமாட்டம் – பேரிஜம் ஏரிக்கு தடை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கொடைக்கானல்: புலிகள் நடமாட்டம் – பேரிஜம் ஏரிக்கு தடை!

தமிழ்நாடு

கொடைக்கானல்: புலிகள் நடமாட்டம் – பேரிஜம் ஏரிக்கு தடை!

Admin
Last updated: மே 16, 2026 9:29 காலை
Admin
Share
SHARE

மலைகளின் இளவரசியான கொடைக்கானல், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய சுற்றுலாத் தலமாகும். குறிப்பாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விடுமுறையைக் கழிக்க லட்சக்கணக்கானோர் இங்கு வருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால், குடும்பத்துடன் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளனர்.

கொடைக்கானலில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில், பேரிஜம் வனப்பகுதியும் ஒன்று. இங்குள்ள ஏரியின் இயற்கை அழகு சுற்றுலாப் பயணிகளைக் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதனால், இப்பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது.

இந்நிலையில், பேரிஜம் வனப்பகுதியில் நேற்று 3-க்கும் மேற்பட்ட புலிகள் நடமாட்டம் காணப்பட்டது. புலிகள் சாலையில் சுற்றித் திரிந்ததால், வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதித்துள்ளனர். மேலும், மதிக்கட்டான்சோலை, தொப்பி தூக்கி பாறை போன்ற பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புலிகளின் நடமாட்டம் கட்டுக்குள் வரும் வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை, இந்தத் தடை அமலில் இருக்கும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:KodaikanalTiger AlertTourism Banகொடைக்கானல்சுற்றுலா தடைபுலிகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐக்கிய அரபு அமீரகம் சென்றார் மோடி: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Next Article போஜ்சாலா வளாகம் சரஸ்வதி கோயில்: மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சட்டம் ஒழுங்கை சீர்செய்யுங்கள்: முதல்-அமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மதுரை, தாம்பரம், திருவொற்றியூர், சேலம் ஓமலூர் சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை: சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத், தியாகத்தையும் சகோதரத்துவத்தையும் போற்றும் வகையில் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், ஏழை மக்களுக்கு இறைச்சியை…

1 Min Read
தமிழ்நாடு

கை விலங்குடன் தப்பிய ரவுடி: காதலி மூலம் சினிமா பாணியில் பிடித்த போலீஸ்!

சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பித்த ரவுடியை, அவரது காதலியை வைத்து போலீசார் சினிமா பாணியில் கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை…

1 Min Read
அமைச்சர் ஜெகதீஸ்வரி மகளிர் உரிமைத் தொகை குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும்: அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் விருதுநகரில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?