MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கடையநல்லூர் அருகே 1,300 கிலோ புகையிலை பறிமுதல்: வியாபாரி கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கடையநல்லூர் அருகே 1,300 கிலோ புகையிலை பறிமுதல்: வியாபாரி கைது!
தமிழ்நாடு

கடையநல்லூர் அருகே 1,300 கிலோ புகையிலை பறிமுதல்: வியாபாரி கைது!

Admin
Last updated: மே 15, 2026 10:07 காலை
Admin
Share
SHARE

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, பூட்டிக் கிடந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,300 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய வியாபாரி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளதுடன், மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

மேல கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியில் நீண்ட நாட்களாக பூட்டிக் கிடந்த ஒரு குடோனில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவரது உத்தரவின் பேரில், புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் தலைமையில், கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் மற்றும் போலீஸார் கொண்ட குழுவினர், இந்திரா நகர் பகுதியில் உள்ள அந்த குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, குடோனில் ஏராளமான மூட்டைகளில் மொத்தம் 1,300 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் புகையிலை பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த குடோனில் இருந்து புகையிலை மூட்டைகளை போலீஸார் கைப்பற்றி, மேல் நடவடிக்கைகளுக்காக கொண்டு சென்றனர்.

மேலும் நடத்திய விசாரணையில், கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வியாபாரி சக்திவேல் (50 வயது) என்பவர், இந்த புகையிலை பொருட்களை வாங்கி வந்து குடோனில் பதுக்கி வைத்து, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் சக்திவேலை கைது செய்தனர். இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய சக்திவேலின் உறவினரான வைரமுத்து (41 வயது) என்பவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:crimeKadaiyanallurpoliceTobaccoதென்காசிபுகையிலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ராமேஸ்வரம் கோவில்: ₹3.5 கோடி லட்டு மோசடி – 9 பேர் மீது நடவடிக்கை!
Next Article ஸ்டாலின் திருச்சி கிழக்கில் போட்டியிட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ. 686 கோடியாக இருந்தது, தற்போது…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சி: மத்திய அமைச்சர் சர்பானந்தா பெருமிதம்

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏற்றுமதி-இறக்குமதி கப்பல் கொள்கலனை…

ஜூலை 4, 2026

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: தேதி அறிவிப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல்…

ஜூலை 4, 2026

பள்ளிகளுக்கு அருகே ‘ஸ்டிங்’ பானங்களுக்கு தடை: அமைச்சர் அறிவிப்பு

பள்ளிகளுக்கு அருகில் 'ஸ்டிங்' எனர்ஜி பானம் விற்க…

ஜூலை 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரபல திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய பாக்யராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: ஜூலை 1 முதல் அமல்

14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் கட்டணங்களில் அதிரடி மாற்றம். ஜூலை 1 முதல் புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கும், புதுப்பிப்பதற்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என மத்திய…

1 Min Read
தமிழ்நாடு

வெடித்தது உட்கட்சி மோதல்… சட்டசபைக்கு 2 அணிகளாக வந்த அதிமுகவினர்

சட்டசபை தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலகக்கோரி கட்சிக்குள் முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள்…

1 Min Read
தமிழ்நாடு

மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை வெளியீடு: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்டார். மின்மின்துறையின் கடன் ரூ. 2,47,130 கோடியாக உயர்ந்துள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?