MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஐபிஎல் 2026: 5 பயிற்சியாளர்கள் பதவி பறிபோகிறதா? ரசிகர்கள் அதிர்ச்சி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - விளையாட்டு - ஐபிஎல் 2026: 5 பயிற்சியாளர்கள் பதவி பறிபோகிறதா? ரசிகர்கள் அதிர்ச்சி!

விளையாட்டு

ஐபிஎல் 2026: 5 பயிற்சியாளர்கள் பதவி பறிபோகிறதா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Admin
Last updated: மே 13, 2026 9:00 மணி
Admin
Share
SHARE

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற கடுமையாக போராடி வருகின்றன. ஆனால், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போன்ற பலம் வாய்ந்த அணிகள் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளன. இந்த சீசன் முடிவடைந்ததும், பல அணிகளில் பெரிய அளவிலான அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மோசமான செயல்பாடுகளால் ஐந்து முன்னணி அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் தங்கள் பதவிகளை இழக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் படுதோல்வி அடைந்ததால், சம்பந்தப்பட்ட அணிகளின் உரிமையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், தலைமைப் பயிற்சியாளர்களின் பதவி பறிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் முதலில் வருபவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும், இந்த சீசனில் முதலில் வெளியேறிய அணி மும்பை இந்தியன்ஸ் தான். விளையாடிய 11 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜெயவர்தனே ஆகியோரின் அணுகுமுறைகள் தோல்வியடைந்ததால், அடுத்த சீசனில் இருவரும் நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. மும்பை நிர்வாகம் புதிய பயிற்சியாளரைத் தேடும் பணியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து, பிளே ஆப் வாய்ப்பை இழந்த லக்னோ அணிக்கு, கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் பயிற்சியாளர் லாங்கரின் தவறான முடிவுகளே முக்கிய காரணம். கடந்த ஆண்டும் இந்த அணி மோசமாகவே செயல்பட்டது. சிறந்த வீரர்கள் இருந்தும், அவர்களுக்கான சரியான கூட்டணியை லாங்கரால் அமைக்க முடியவில்லை. தொடக்க வீரராக பண்ட்டையும், 3வது இடத்தில் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரனையும் இறக்கியது போன்ற லாங்கரின் வியூகத் தவறுகள் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.

மூன்றாவது நபராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் உள்ளார். அஜிங்க்யா ரஹானே தலைமையிலான அந்த அணி தற்போது 8வது இடத்தில் தவித்து வருகிறது. தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயரின் முன் அனுபவமின்மை அணியின் ஆட்டத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதேபோல், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானியும் ஆபத்தான கட்டத்தில் உள்ளார். பலமான அணி இருந்தும், நிரந்தரமான ஆடும் லெவனை தேர்வு செய்யாமல், தொடர்ந்து செய்த பரிசோதனைகளால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெளியேறும் விளிம்பில் நிற்கிறது. கடைசியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங். இவரது நிலைமை 50-50 ஆக உள்ளது. பல முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறிய நிலையிலும், சிஎஸ்கே தற்போது 5வது இடத்தில் போராடி வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றால் அவரது பதவி தப்பும். ஒருவேளை சிஎஸ்கே வெளியேறினால், பல ஆண்டுகளாக நீடிக்கும் பிளெமிங் தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெக அரசுக்கு மகத்தான வெற்றி: முதல்வர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பில் சாதனை
Next Article பிரிக்ஸ் மாநாடு: டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

விளையாட்டு

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வீர் சோத்ரானி தோல்வியால் இந்தியா வெளியேற்றம்

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய வீரர் வீர் சோத்ரானி தோல்வியடைந்ததால், இத்தொடரில் இந்தியாவின் பயணம் முடிவுக்கு வந்தது.

0 Min Read
விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்தும் விலகுகிறாரா சூர்யகுமார் யாதவ்?

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்தும், இந்திய அணியில் இருந்தும் நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், தனது ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ்-இல் இருந்தும் விலக உள்ளதாக…

2 Min Read
விளையாட்டு

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மகளிர் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் தீப்தி சர்மா வரலாற்று சாதனை படைத்தார்.

2 Min Read
விளையாட்டு

பாகிஸ்தானிடம் தோற்கக் கூடாது: ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேச்சு

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன், இந்திய வீரர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் நெருக்கடிகள் குறித்து பேசினார்.…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?