புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை (மார்ச் 2 மற்றும் 3) டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.
இந்தியா இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக, வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலான கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில், ரஷ்யா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பிற இந்திய அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிரிக்ஸ் கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் மேலும் சில நாடுகளும் இதில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டத்தில் ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சரும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் நடைபெறும் இந்த முக்கிய சர்வதேச கூட்டத்தின் மூலம், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரஷ்யா-இந்தியா இடையேயான உறவுகளும் இந்த சந்திப்பின் மூலம் புதிய பரிமாணத்தை அடையும் என நம்பப்படுகிறது.