ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இடுரி மாகாணத்தில் வேகமாக பரவிவரும் இந்த நோய்த்தொற்றால் இதுவரை 65 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என ஆப்பிரிக்க உயர்மட்ட சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
வாந்தி, இரத்தம், விந்து போன்ற உடல் திரவங்கள் மூலம் எளிதில் பரவும் தன்மை கொண்ட எபோலா, உயிரிழப்பை ஏற்படுத்தும் கொடிய நோயாகும். இதன் தீவிரத்தை உணர்ந்து சுகாதார அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த முறை காங்கோவில் ஏற்பட்ட எபோலா பாதிப்பில் 43 பேர் உயிரிழந்த நிலையில், இந்த முறை 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1976 ஆம் ஆண்டு முதல் காங்கோவில் எபோலா நோய் பரவி வரும் நிலையில், இது 17வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் பாதிப்பால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சுகாதாரத் துறையினர் நோயைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.