MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஆசைக்கு இணங்க மறுத்த பெண் படுகொலை: தொழில் அதிபர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - ஆசைக்கு இணங்க மறுத்த பெண் படுகொலை: தொழில் அதிபர் கைது

இந்தியா

ஆசைக்கு இணங்க மறுத்த பெண் படுகொலை: தொழில் அதிபர் கைது

Admin
Last updated: மே 11, 2026 2:50 மணி
Admin
Share
SHARE

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஒசக்கோட்டை தாலுகா சூலிபெலே பகுதியை சேர்ந்தவர் தீபக் கிருஷ்ணா. தொழில் அதிபரான இவர் சூலிபெலே பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் குறைவான இடத்தில் பெரிய பங்களா ஒன்றில் வசித்து வந்தார். அவர் தனது வீட்டில் 2 விலையுயர்ந்த நாய்களை வளர்த்து வந்தார்.

இதனை கவனித்துக்கொள்ள கேரளம் மாநிலம் திருச்சூர் பகுதியில் வசிக்கும் ஆண்டனி என்பவரின் மனைவி ஸ்மிதா (வயது 47) என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தார். மேலும் ஸ்மிதாவுடன் அவரது ஊரை சேர்ந்த அலினா என்ற பெண்ணும், சின்னு என்பவரும் வீட்டு வேலைக்கு வந்திருந்தனர்.

இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி ஸ்மிதா நாய்களுக்கு உணவு வைத்துக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அவரை கவனித்த தீபக் கிருஷ்ணா, ஸ்மிதாவை வீட்டுக்குள் அழைத்துள்ளார். பின்னர் ஸ்மிதாவை, தீபக் கிருஷ்ணா தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் அவரை பாலியல் பலாத்காரம் செய்யவும் முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால் ஸ்மிதா அதற்கு சம்மதிக்காமல், அங்கிருந்து தப்ப முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த தீபக் கிருஷ்ணா வீட்டில் இருந்த உருட்டு கட்டையை கொண்டு ஸ்மிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலை தடுக்க வந்த அலினா மற்றும் சின்னுவையும் அவர் மிரட்டி உள்ளார். இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

பின்னர் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்மிதாவை மீட்ட அலினா மற்றும் சின்னு ஆகியோர் சிகிச் சைக்காக சூலிபெலேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ஸ்மிதா, கேரளம் மாநிலத்தில் உள்ள ஜூபிலி மிஷன் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்மிதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்மிதாவின் கணவர் ஆண்டனி திருச்சூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த வழக்கை சூலிபெலே போலீஸ் நிலையத்துக்கு மாற்றினர். அதைத்தொடர்ந்து சூலிபெலே போலீசார் தீபக் கிருஷ்ணாவை கைது செய்தனர்.

மேலும் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மதுபான விடுதி ஒன்றில் தகராறு செய்து, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு சிறைக்கு சென்றார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதையடுத்து போலீசார், தீபக் கிருஷ்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” – பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்
Next Article சபாநாயகர் தேர்தலில் ஜே.சி.டி. பிரபாகர் போட்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

பிரதமர் மோடி அரசை கவிழ்க்க ராகுல் சதி: பாஜக கடும் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கவிழ்க்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சதி செய்வதாகவும், வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரிலேயே ராகுல் காந்தி செயல்படுவதாகவும்…

1 Min Read
இந்தியா

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த விரிவான செய்தி.

1 Min Read
இந்தியா

திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆகஸ்டு மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை ஆகஸ்டு மாதம் தரிசிக்க பக்தர்களுக்கான பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், தங்கும் விடுதி வசதிகளுக்கான ஆன் லைன் கோட

1 Min Read
இந்தியா

தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசின் திடீர் அறிவிப்பு

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை 10% ஆக உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?