MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” – பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” – பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - “அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” – பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்

இந்தியா

“அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” – பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்

Admin
Last updated: மே 11, 2026 2:50 மணி
Admin
Share
SHARE

புதுடெல்லி: வளைகுடா போர் சூழலுக்கு மத்தியில், இந்தியர்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும், வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்க வேண்டும் என்பது உட்பட பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள 7 கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல் மற்றும் உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இது குறித்தி தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ள ராகுல் காந்தி, “நேற்று பிரதமர் மோடி மக்களிடம் தியாகங்களைக் கோரியுள்ளார். தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடு செல்லாதீர்கள், பெட்ரோல் பயன்பாட்டைக் குறையுங்கள், உரம் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யுங்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள் என்று. இவை வெறும் உபதேசங்கள் அல்ல – இவை தோல்விக்கான ஆதாரங்கள்.

கடந்த 12 ஆண்டுகளில், எதை வாங்க வேண்டும், எதை வாங்கக்கூடாது, எங்கே செல்ல வேண்டும், எங்கே செல்லக்கூடாது என்று பொதுமக்களிடமே சொல்லும் அளவிற்கு நாட்டை அவர் ஒரு இக்கட்டான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். ஒவ்வொரு முறையும், அவர்கள் தங்கள் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்காக, பழியை மக்கள் மீது சுமத்துகிறார்கள். சமரசத்துக்கு உள்ளான ஒரு பிரதமரால் நாட்டை வழிநடத்துவது என்பது இனி அவரது எல்லைக்கு உட்பட்டதாக இருக்காது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இது குறித்துக் கூறுகையில், அமெரிக்கா – ஈரான் போர் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் பிரதமர் திகைத்து நிற்பதாகக் குற்றம் சாட்டினார். தேர்தல்களும் அரசியலுமே பிரதமரின் முன்னுரிமையாக இருப்பதால், நாடு பொருளாதாரப் பேரழிவை நோக்கிச் செல்வதாக அவர் எச்சரித்தார்.

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், பிரதமரின் இந்தத் திடீர் கட்டளைகளுக்கான உண்மையான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் பொருளாதார நிலை குறித்த உண்மையான நிலவரத்தை விளக்க உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் முன்வைத்துள்ள 7 கோரிக்கைகள்: நாட்டின் நலன் கருதி பொதுமக்கள் 7 கோரிக்கைகளை பின்பற்ற முன்வருமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். அவை பின்வருமாறு: 1. வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான வாய்ப்புள்ள இடங்களில் அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். 2. ஓர் ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். 3. பெட்ரோல் / டீசல் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். 4. சமயல் எண்ணை பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். 5. ரசாயன உர பயன்பாட்டை குறைத்துக்கொண்டு இயற்கை உரத்துக்கு மாற வேண்டும். 6. வெளிநாட்டு தயாரிப்புகளைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். 7. வெளிநாட்டுப் பயணங்களை ஓர் ஆண்டுக்கு தவிருங்கள். இவ்வாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் காலத்தைப் போல வீடியோ கான்பரன்சிங் மற்றும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் கூறியிருப்பது, நிலைமை மிகவும் தீவிரமாக இருப்பதை உணர்த்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரதமர் மோடி, சோனியாவை சந்திக்க முதலமைச்சர் விஜய் திட்டம்
Next Article ஆசைக்கு இணங்க மறுத்த பெண் படுகொலை: தொழில் அதிபர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குருவாயூர் கோவிலில் திருமணத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட தேதி

குருவாயூர் கோவிலில் 377 திருமணங்கள்: முன்பதிவு அமோகம்!

கேரளாவின் குருவாயூர் கோவிலில் ஆகஸ்ட் 23 அன்று 377 திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.…

ஆகஸ்ட் 12, 2026

16 வயது சிறுவன் குளத்தில் தங்கியது ஏன்? உடலில் எரிச்சல் காரணம்!

மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் உடலில் எரிச்சல்…

ஆகஸ்ட் 12, 2026

பெங்களூரு சிறையில் திடீர் சோதனை: பிரஜ்வல் ரேவண்ணாவிடம் செல்போன் சிக்கியது

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவிடம் இருந்து…

ஆகஸ்ட் 12, 2026

ஜாம்பி இளைஞர்கள்: பஞ்சாப்-ராஜஸ்தான் சர்ச்சை – பாஜக, ஆம் ஆத்மி இடையே வார்த்தை மோதல்

பஞ்சாபில் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்பாட்டால் 'ஜாம்பிகள்' போல…

ஆகஸ்ட் 12, 2026

24 மணி நேரமும் ரேஷன் அரிசி: சத்தீஸ்கரில் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகம்

சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

இந்தியா

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: சென்னை மண்டலம் 2-வது இடம்

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெற்ற தேர்வுகளில், ஆன்-ஸ்கிரீன் மார்கிங் முறையில்…

1 Min Read
உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வழக்கு தொடர்பான தீர்ப்பு
இந்தியா

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து தமிழக அரசின்…

1 Min Read
பீகார் சசராம் அரசு மருத்துவமனையில் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்
இந்தியா

பீகாரில் மின் தடை: செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை

பீகாரில் உள்ள சசராம் அரசு மருத்துவமனையில் மின்வெட்டு மற்றும் ஜெனரேட்டர் செயலிழந்ததால், மருத்துவர்கள் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டது. இது சுகாதார…

2 Min Read
ஜார்க்கண்ட் மாணவர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணி செல்வது
இந்தியா

ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்: ஸ்ட்ரெச்சரில் வந்து இணைந்த மஹ்தோ

ஜார்க்கண்டில் அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் போராட்டம். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், சட்டமன்றத்தை நோக்கி பேரணி. உண்ணாவிரதப் போராளி மஹ்தோ ஸ்ட்ரெச்சரில்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?