MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: “அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” – பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > “அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” – பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்
இந்தியா

“அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” – பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்

Admin
Last updated: May 11, 2026 2:50 pm
Admin
Share
SHARE

புதுடெல்லி: வளைகுடா போர் சூழலுக்கு மத்தியில், இந்தியர்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும், வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்க வேண்டும் என்பது உட்பட பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள 7 கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல் மற்றும் உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இது குறித்தி தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ள ராகுல் காந்தி, “நேற்று பிரதமர் மோடி மக்களிடம் தியாகங்களைக் கோரியுள்ளார். தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடு செல்லாதீர்கள், பெட்ரோல் பயன்பாட்டைக் குறையுங்கள், உரம் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யுங்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள் என்று. இவை வெறும் உபதேசங்கள் அல்ல – இவை தோல்விக்கான ஆதாரங்கள்.

கடந்த 12 ஆண்டுகளில், எதை வாங்க வேண்டும், எதை வாங்கக்கூடாது, எங்கே செல்ல வேண்டும், எங்கே செல்லக்கூடாது என்று பொதுமக்களிடமே சொல்லும் அளவிற்கு நாட்டை அவர் ஒரு இக்கட்டான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். ஒவ்வொரு முறையும், அவர்கள் தங்கள் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்காக, பழியை மக்கள் மீது சுமத்துகிறார்கள். சமரசத்துக்கு உள்ளான ஒரு பிரதமரால் நாட்டை வழிநடத்துவது என்பது இனி அவரது எல்லைக்கு உட்பட்டதாக இருக்காது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இது குறித்துக் கூறுகையில், அமெரிக்கா – ஈரான் போர் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் பிரதமர் திகைத்து நிற்பதாகக் குற்றம் சாட்டினார். தேர்தல்களும் அரசியலுமே பிரதமரின் முன்னுரிமையாக இருப்பதால், நாடு பொருளாதாரப் பேரழிவை நோக்கிச் செல்வதாக அவர் எச்சரித்தார்.

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், பிரதமரின் இந்தத் திடீர் கட்டளைகளுக்கான உண்மையான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் பொருளாதார நிலை குறித்த உண்மையான நிலவரத்தை விளக்க உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் முன்வைத்துள்ள 7 கோரிக்கைகள்: நாட்டின் நலன் கருதி பொதுமக்கள் 7 கோரிக்கைகளை பின்பற்ற முன்வருமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். அவை பின்வருமாறு: 1. வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான வாய்ப்புள்ள இடங்களில் அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். 2. ஓர் ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். 3. பெட்ரோல் / டீசல் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். 4. சமயல் எண்ணை பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். 5. ரசாயன உர பயன்பாட்டை குறைத்துக்கொண்டு இயற்கை உரத்துக்கு மாற வேண்டும். 6. வெளிநாட்டு தயாரிப்புகளைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். 7. வெளிநாட்டுப் பயணங்களை ஓர் ஆண்டுக்கு தவிருங்கள். இவ்வாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் காலத்தைப் போல வீடியோ கான்பரன்சிங் மற்றும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் கூறியிருப்பது, நிலைமை மிகவும் தீவிரமாக இருப்பதை உணர்த்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரதமர் மோடி, சோனியாவை சந்திக்க முதலமைச்சர் விஜய் திட்டம்
Next Article ஆசைக்கு இணங்க மறுத்த பெண் படுகொலை: தொழில் அதிபர் கைது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்

கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒருவர், காரில் தீப்பிடித்து…

June 28, 2026

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…

June 28, 2026

மகளிர் இலவச பயணத்தால் தனியார் பஸ் சேவை நிறுத்தம்!

மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்தால் தனியார்…

June 28, 2026

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு…

June 28, 2026

காசா இனப்படுகொலை: மோடி அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்…

June 28, 2026

You Might Also Like

இந்தியா

முட்டை நீக்கம்: மேற்கு வங்க மதிய உணவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

மேற்கு வங்கத்தில் அரசு பள்ளிகளின் மதிய உணவு திட்டத்தில் இருந்து முட்டை நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக சோயா அல்லது பனீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள்…

1 Min Read
இந்தியா

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி: உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பகடி பதில்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் 'கரப்பான்பூச்சி' கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில், அதற்கு நையாண்டி பதிலடியாக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்ற எக்ஸ் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் திரிணமூல்…

2 Min Read
இந்தியா

மேற்கு வங்க முதல்வர் பதவியேற்பு விழாவில் பா.ஜனதா-வின் 98 வயது தொண்டரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி

மேற்கு வங்காளத்தின் முதல் பா.ஜ.க. முதல் மந்திரி யாக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர்.…

1 Min Read
இந்தியா

மருமகளின் ரீல்ஸ் வீடியோவால் மாமனார், மாமியார் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்

அரியானாவில், மருமகளின் ரீல்ஸ் வீடியோக்களால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாமனார், மாமியார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?