அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். இது அதிமுகவில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
நடிகை கவுதமி, 1997 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அங்கு இளைஞரணி துணைத் தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தார். இருப்பினும், தனது சொத்து தொடர்பான பிரச்சனையில் பாஜக தனக்கு உதவவில்லை என்று கூறி, 2023 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து விலகினார். பின்னர், 2024 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த அவருக்கு, கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை.
இந்நிலையில், இன்று (ஜூன் 14) அதிமுகவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இன்று முதல் நான் வகித்து வரும் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, சமூக சேவை செய்ய ஏதுவாக கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிமுகவில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் மனதார நன்றி கூறி, தன்னை கட்சியிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.