மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐஎஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை ஒடுக்கும் பணியில் அமெரிக்க படைகளும் நைஜீரிய ராணுவமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, நைஜீரியாவின் புரோனா மாகாணத்தில் நேற்று இரவு அமெரிக்க ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். நைஜீரிய அரசுப் படையினருடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனான அபூ பகர் அல் மனுகி கொல்லப்பட்டான்.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், 'ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் மனுகி கொல்லப்பட்டதை உறுதி செய்கிறேன். பயங்கரவாதத்தை வேரறுப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல், பயங்கரவாத அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.