இடாகோ விமானப்படைத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில், இரண்டு ராணுவ விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தைத் தொடர்ந்து, இரு விமானங்களும் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தன.
விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதியபோது, அதிர்ஷ்டவசமாக விமானிகள் உரிய நேரத்தில் வெளியேறி உயிர் தப்பினர். இது குறித்து மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்தின் 366வது ஃபைட்டர் விங் முகநூல் பக்கத்தில், 'அவசர மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் E/A-18G “வைக்கிங்ஸ்” கிரௌலர் குழுவைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் சிக்கியதாக இடாஹோ ஸ்டேட்ஸ்மேன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விமானங்கள் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டவை.
கன்ஃபைட்டர் ஸ்கைஸ் விமானக் கண்காட்சியின் அறிவிப்பாளர் ஒருவர், 'விபத்தில் சிக்கிய நான்கு கடற்படை விமானிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்' என்று உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம் விமானப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.