MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிரதமர் அறிவுரை மீறல்: பாஜக பிரமுகருக்கு முதல்வர் அதிரடி நோட்டீஸ்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > பிரதமர் அறிவுரை மீறல்: பாஜக பிரமுகருக்கு முதல்வர் அதிரடி நோட்டீஸ்!
இந்தியா

பிரதமர் அறிவுரை மீறல்: பாஜக பிரமுகருக்கு முதல்வர் அதிரடி நோட்டீஸ்!

Admin
Last updated: May 16, 2026 2:00 pm
Admin
Share
SHARE

உலகளாவிய போர் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை மீறி மத்தியப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, பாஜக பிரமுகர் சவுபாக்ய சிங் தாக்கூர் மீது அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, உலக சந்தையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையை சமாளிக்க, பொதுமக்கள் தங்க நகை வாங்குவதைத் தள்ளிப்போடவும், பெட்ரோல், டீசலை சிக்கனமாகப் பயன்படுத்தவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பிரதமரின் அறிவுரையை ஏற்று, மத்திய அமைச்சர்களும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் தங்கள் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, அத்தியாவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கினர்.

ஆனால், மத்தியப் பிரதேச மாநில பாஜக பிரமுகரும், அம்மாநிலப் பாடநூல் கழகத்தின் தலைவருமான சவுபாக்ய சிங் தாக்கூர், பிரதமரின் வேண்டுகோளைப் புறக்கணித்து, உஜ்ஜயினிலிருந்து போபாலுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் கொண்ட ஊர்வலத்தை நடத்தியுள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்பதற்காக அவர் சென்றபோது இந்த வாகன அணிவகுப்பு நடைபெற்றது. இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, முதல்வர் மோகன் யாதவ் உடனடியாக சவுபாக்ய சிங்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

தேசிய நலன் சார்ந்த வேண்டுகோளைப் புறக்கணித்ததற்கும், அரசின் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாததற்கும் விளக்கம் கேட்டிருப்பதாக அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சவுபாக்ய சிங் பாடநூல் கழகத்தின் அலுவலகம் அல்லது வளாகத்திற்குள் நுழையவும், கழகத்திற்குச் சொந்தமான எந்தவொரு வசதியையும், வாகனத்தையும், ஊழியரையும் பயன்படுத்தவும், கழகம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கவும், நிர்வாகம் அல்லது நிதி சார்ந்த முடிவுகளில் கையெழுத்திடவும் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மாவட்ட பாஜக தலைவர் ஹன்ஸ்ராஜ் விஷ்வ கர்மா, உ.பி அமைச்சரவையில் புதிய உறுப்பினராகச் சேர்க்கப்பட்டதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் சுமார் 80 வாகனங்களுடன் அவரை வரவேற்றுள்ளனர். இந்த ஊர்வலத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் யோகி அரசு பயன்படுத்தும் புல்டோசரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அமைச்சரான ஹன்ஸ்ராஜ் இதை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதுவும் தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Madhya PradeshPM Modiஎரிசக்தி சிக்கனம்பாஜகமத்தியப் பிரதேசம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கேரளாவில் 7 நாட்கள் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடக்கம்!
Next Article நைஜீரியாவில் அமெரிக்க அதிரடி: ஐஎஸ் தலைவர் அபூபக்கர் மனுகி சுட்டுக்கொலை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் இனி மின்சார ஆட்டோக்கள் மட்டுமே: காற்று மாசை கட்டுப்படுத்த அதிரடி!

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய அதிரடி உத்தரவு! 2027 முதல் மின்சார…

May 16, 2026

மத்திய அமைச்சர் மகனுக்கு சிறை: போக்சோ வழக்கில் பகீர் கைது!

மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய்…

May 16, 2026

நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி – ஊழியர்கள் வீரத்தால் தவிடுபொடி!

நாசிக்கில் நகைக்கடையை துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்றபோது,…

May 16, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.3.45 கோடி குவிந்தது! பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.3.45…

May 16, 2026

தேசப் பிரிவினைக்கு சாவர்க்கரும் காரணம்: திக்விஜய் சிங் சர்ச்சை பேச்சு

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், நாட்டின்…

May 16, 2026

You Might Also Like

இந்தியா

தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசின் திடீர் அறிவிப்பு

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை 10% ஆக உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

1 Min Read
இந்தியா

பெங்களூருவில் சாதி பாகுபாடு காரணமாக‌ பட்டியலின போலீஸாருக்கு வாடகை வீடு தர மறுப்பு

பெங்களூரு: கர்​நாடக காவல் துறை​யில் பணி​யாற்​றும் பட்​டியலின மற்​றும் பழங்​குடி​யின போலீ​ஸாருக்​கும் வீடு வாடகைக்கு தர மறுக்​கப்​படு​வ​தாக சம்​பந்​தப்​பட்ட வகுப்பை சேர்ந்த போலீ​ஸார், கர்​நாடக போலீஸ் ட

1 Min Read
இந்தியா

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தம்!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் 12.4 லட்சம் மருந்தகங்கள் மே 20 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இதனால் மருந்து விநியோகம்…

1 Min Read

“விபி ஜி ராம் ஜி திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை” – கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் மத்திய அரசின் 'விபி ஜி ராம் ஜி’ (VB GRAM G) திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று காங்கிரஸ் தலைவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?