MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 7 நாட்களில் 949 குற்றவாளிகள் கைது: காவல்துறை அதிரடி நடவடிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 7 நாட்களில் 949 குற்றவாளிகள் கைது: காவல்துறை அதிரடி நடவடிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 7 நாட்களில் 949 குற்றவாளிகள் கைது: காவல்துறை அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு

7 நாட்களில் 949 குற்றவாளிகள் கைது: காவல்துறை அதிரடி நடவடிக்கை

Admin
Last updated: ஜூலை 8, 2026 8:00 மணி
Admin
Share
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப.
SHARE

தமிழகம் முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், காவல்துறை தீவிர அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட 949 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு காவல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் திரு.மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், குற்ற குணத்தார் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 1 முதல் ஜூலை 7, 2026 வரையிலான காலகட்டத்தில், மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகளின் போது, மொத்தம் 24,025 சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் சோதனை செய்யப்பட்டனர். இவர்களில், குற்றச்செயல்களில் ஈடுபட்ட 949 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிணையில் வெளிவர முடியாத 2,385 பிடியாணைகள் இந்த 7 நாட்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளை (NBW) நிறைவேற்றுவதற்கும், தலைமறைவு குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோருக்கு, சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், குற்ற குணத்தார், தொடர் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளவும், வழக்கமான சோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நெருக்கமான கண்காணிப்புகள் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகள், கண்காணிப்பு பணிக்கான அமலாக்க ஒருங்கிணைப்பை மேம்படுத்தியுள்ளது. மேலும், தடுப்பு காவல் நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பிடியாணைகள் நிறைவேற்றுதலை அதிகரித்து, தொடர் குற்றவாளிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களுக்கு எதிராக இலக்கு வைத்து நடவடிக்கை எடுக்க இது உதவியுள்ளது.

இதன் மூலம், மாநிலம் முழுவதும் பொது ஒழுங்கை உயர்தரத்தில் பராமரிப்பதற்கும், பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்றுள்ளன என்று காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், குற்றவாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Crime NewsLaw and OrderTamil Nadu Policeகாவல்துறை நடவடிக்கைகுற்றவாளிகள் கைதுசட்டம் ஒழுங்குதமிழக காவல்துறைதிரு.மகேஷ் குமார் அகர்வால்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேலம் மாநகராட்சி குடிநீர் திட்ட ஒப்பந்தம் கையெழுத்து சேலம் மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டம்: ஒப்பந்தம் கையெழுத்து
Next Article குடியிருப்பு பகுதியில் டெலிவரி ஊழியரை குறிவைத்து பாயும் சிறுத்தை இந்தூரில் சிறுத்தை தாக்குதல்: டெலிவரி ஊழியரை குறிவைத்த காட்சி வைரல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் சரிந்து விழுந்த விநாயகர் சிலை

மும்பையில் விநாயகர் சிலை விபத்து: இருவர் உயிரிழப்பு, 5 பேர் காயம்

மும்பையில் விநாயகர் வரவேற்பு விழாவின்போது ராட்சத விநாயகர் சிலை சரிந்து விழுந்ததில் இருவர்…

ஆகஸ்ட் 23, 2026

இளம் வாக்காளர்களை கவரும் பாஜக: புதிய வியூகம்

இளம் வாக்காளர்களை ஈர்க்கும் நோக்கில் பாஜக புதிய…

ஆகஸ்ட் 23, 2026

ராகுல் காந்தி வீடு முன்பு சீக்கியர்கள் போராட்டம்

1984 சீக்கிய கலவர வழக்கில் தண்டனை பெற்ற…

ஆகஸ்ட் 23, 2026

ஐடி ஊழியர் கொலை: மனைவியும் உறவினர்களும் கைது

டெல்லியில் ஐடி ஊழியர் வினய் குப்தா கொலை…

ஆகஸ்ட் 23, 2026

48 ஆண்டுகளுக்குப் பிறகு புரி ஜெகந்நாதர் கோயில் கருவூல கணக்கெடுப்பு

ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில்,…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சேலம்: கோவிலில் அம்மன் நகை திருட்டு – இருவர் கைது!

சேலம் உத்தமசோழபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

குதிரை பேரம் நடத்தியவர்களுக்கு தண்டனை நிச்சயம்: செங்கோட்டையன்

சென்னை மாநகரத்தை சிறப்பு மிக்க, பொலிவான நகரமாக மாற்ற வேண்டும் என்பதே முதலமைச்சரின் கனவு என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். குதிரை பேரம் நடத்தியவர்களுக்கு தண்டனை நிச்சயம்…

1 Min Read
தமிழ்நாடு

சென்னை டெக் மகிந்திராவில் பயங்கர தீ விபத்து: ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!

சென்னையில் டெக் மகிந்திரா அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து! ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரியும் வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள். ஊழியர்கள் பத்திரமாக மீட்பு.

1 Min Read

தூத்துக்குடியில் 1.25 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி பணி நாளை தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 1.25 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. கால்நடைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதே இதன் நோக்கம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?