MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் செல்போனுக்கு தடை அமல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் செல்போனுக்கு தடை அமல்
தமிழ்நாடு

திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் செல்போனுக்கு தடை அமல்

Admin
Last updated: June 30, 2026 10:39 pm
Admin
Share
SHARE

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நாளை (01.07.2026) முதல் செல்போன் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளன.

இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல நீதிப்பேராணை மனுவின் (W.P.(MD) No.25439/2022) உத்தரவின்படி, கடந்த 14.11.2022 முதல் கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை நடைமுறையில் உள்ளது. இந்த உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் வகையில், 01.07.2026 முதல் தடை மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது.

பொதுதரிசனம், ரூ.100 விரைவு தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை என அனைத்து நுழைவு வழிகளிலும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். எனவே, பக்தர்கள் தங்களது செல்போன்களை தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக, கோயில் நிர்வாகம் சார்பில் பல இடங்களில் செல்போன் வைப்பிடங்கள் (Mobile Deposit Counters) ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சோதனையின்போது பக்தர்களிடம் செல்போன்கள் கண்டறியப்பட்டால், அவை பாதுகாப்பு நடைமுறைகளின்படி பெறப்பட்டு/பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பு வைப்பகங்களில் வைக்கப்படும். எனவே, 01.07.2026 முதல் கோயிலுக்குள் செல்போன் கொண்டு வராத நடைமுறையை முழுமையாக அமல்படுத்துவதற்கு பக்தர்களும் பொதுமக்களும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கோயில் நிர்வாகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Templesகோவில்செல்போன் தடைதிருச்செந்தூர்பக்தர்களுக்கு அறிவிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இலவச டிக்கெட் கிழித்த நடத்துனர்: தவெக அரசு அதிரடி நடவடிக்கை
Next Article தூத்துக்குடியில் 1.25 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி பணி நாளை தொடக்கம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்ததில் 11 வயது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை

நாளை முதல் ஆதார் மின்னஞ்சல் முகவரி இலவச…

June 30, 2026

ஆந்திராவில் பழங்குடியினர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விசாகப்பட்டினம் பழங்குடியினர்…

June 30, 2026

ஏர் இந்தியா: டெல்லி-மெல்போர்ன் விமான சேவை நாளை முதல் தொடக்கம்

ஏர் இந்தியா, டெல்லி-மெல்போர்ன் இடையே மேம்படுத்தப்பட்ட Boeing…

June 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, பின்னர் காங்கிரஸ் (5), இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் (4),…

1 Min Read
தமிழ்நாடு

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது

சிவகங்கை மாவட்டம், விஷமங்கலம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக…

2 Min Read
தமிழ்நாடு

பெரும்பான்மைக்கு குதிரை பேரம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து பெரும்பான்மை அடைய இந்த அரசு முயற்சிக்கிறது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன்…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?