தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்ட விவகாரத்தில், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை முதல்வர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெங்கட் நாராயணாவின் நியமனம் தற்போது பல விவாதங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதல் இல்லாத ஒருவரை இந்தப் பொறுப்பில் நியமித்தது சரியான நடவடிக்கை அல்ல. வெங்கட் நாராயணாவின் நியமனத்தை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மிகவும் பொருத்தமான ஒருவரை முதல்வர் நியமிக்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
You Might Also Like
ராகுல் காந்தியை பிரதமராக்க ஒன்றிணைவோம்: மாணிக்கம் தாகூர்
நமது மண், மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் மகத்தான இயக்கமாக இது திகழ்கிறது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை அடுத்த பிரதமராக்க…
0 Min Read
நடிகர் விஜய்யை சந்தித்த கமல்: என்ன பேசினார்கள்?
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்தும், திரைப்படத் துறை சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
1 Min Read
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு தேதி மாற்றம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தேதி மாற்றம்! செப்டம்பர் 6-க்கு பதிலாக செப்டம்பர் 27 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.
2 Min Read
திமுக-அதிமுக கூட்டுக்களவாணி ஆட்சி: எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்த த.வெ.க ஐடி விங்!
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி தரும் வகையில், த.வெ.க ஐடி பிரிவு 'இரவல் ஆட்சி' விமர்சனத்தை கிண்டல் செய்துள்ளது.
1 Min Read
