தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்ட விவகாரத்தில், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை முதல்வர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெங்கட் நாராயணாவின் நியமனம் தற்போது பல விவாதங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதல் இல்லாத ஒருவரை இந்தப் பொறுப்பில் நியமித்தது சரியான நடவடிக்கை அல்ல. வெங்கட் நாராயணாவின் நியமனத்தை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மிகவும் பொருத்தமான ஒருவரை முதல்வர் நியமிக்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
You Might Also Like
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு: பண்ணையாளர்களுக்கு மகிழ்ச்சி!
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு, 560 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
1 Min Read
சேலத்தில் பள்ளி வேன் மோதி 3ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பள்ளி வேன் மோதி 3ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.
1 Min Read
விஜய் முதல்வரானதும் எம்எல்ஏ செய்த ஜலபிரதட்சணம்: வீடியோ வைரல்!
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததும், எம்எல்ஏ எம்வி கருப்பையா தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கிணற்றில் ஜலபிரதட்சணம் செய்தார். இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
1 Min Read
மனைவி மீது சந்தேகம்: 9 மாத குழந்தையை கொன்ற தந்தை!
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட தந்தை, குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி 9 மாத குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
1 Min Read